Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரம் மெய்கண்டார் கோவிலில் ... திருக்கோவிலுார் ரகூத்தமர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2019
02:10

மயிலம் : மயிலத்தில் உள்ள வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி  கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று (அக்., 28ல்) யாகசாலை வழிபாடு மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

அதனையொட்டி, நேற்று (அக்., 28ல்) காலை 6:00 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு பால், சந்தன அபிஷேகம் நடந்தது. நேற்று முதல் பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து வருகின்றனர்.வரும் நவம்பர் 2ம் தேதி கந்தசஷ்டி 6ம் நாள் விழாவில் இரவு 7:00 மணிக்கு பாலசித்தர் சன்னதியில் முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி சூரசம்ஹாரமும் நடக்கிறது.

பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கிரிவலம்  நடக்கிறது.விழா ஏற்பாடு களை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம்  சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் விழாக்குழுவினர் செய்து  வருகின்றனர்.திருக்கோவிலுார்கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில்,  கந்தசஷ்டி விழா நேற்று காலை துவங்கியது. 6:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு  விசேஷ அபிஷேகம், அலங்காரம், 9:00 மணிக்கு முருகப்பெருமான் சன்னதியில்  அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வள்ளி தேவசேனா முருகப் பெருமானுக்கு  விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

மாலை 5:00 மணிக்கு ஸ்கந்த ஹோமம், மகாபூர்ணாகுதி, சுவாமிக்கு  லட்சார்ச்சனை, உற்சவர் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து  கொண்டனர்.தொடர்ந்து 7 நாட்களுக்கு நடக்கும் இவ்விழாவின் முக்கிய  நிகழ்ச்சியாக வரும் 2ம் தேதி கந்தசஷ்டி சூரசம்ஹாரம், 3ம் தேதி திருக்கல்யாண  வைபவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar