புதுச்சத்திரம் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2019 03:10
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில், அமாவாசை யை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் 27 ல், நடந்தது.அன்று மாலை 6.00 மணி க்கு பால், தயிர், நெய், குங்குமம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.இரவு 9.30 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதேபோல் பூவாலை அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.