பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் தற்காலிக உண்டியலில் ’சீல்’ வைக்கததால் பக்தர்கள் சர்ச்சையை கிளப்பினர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. நேற்று 3 ல், திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். கொடி மரம் அருகே கோயில் நிர்வாகம் ’மொய்பணம்’போடுவதற்கு 4 தற்காலிக உண்டியல் வைத்திருந்தனர். இந்த உண்டியலில் ’சீல்’ வைக்கப்படவில்லை.
கோயில் தற்காலிக உண்டியல்கள் ’சீல்’ வைக்கவேண்டும். அதனை திருப்பணிக்குழுவினர் கள், பக்தர்கள் முன்னிலையில் உண்டியல் திறந்து பணம் எண்ண வேண்டும். நேற்று 3 ல், உண்டியலில் ’சீல்’ குறித்து சமூகஆர்வலர்கள் கோயில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டனர். முறையான பதில் இல்லை. கடந்தகாலங்களில் உண்டியலில் சீல் இல்லாததல் முறைகேடு நடந்தது. இதுபோன்ற தவறு நடக்காமல் தடுக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேனண்டும் என பக்தர்கள் கோரியுள்ளனர்.