பதிவு செய்த நாள்
04
நவ
2019
02:11
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே ராஜராஜேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.துடியலுார் அருகே உள்ள மீனாட்சி கார்டன்ஸ் குடியிரு ப்பில் ராஜராஜேஸ்வரி அம்மன், ஞான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணி யர், மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நவக்கிரக தம்பதிக ளுடன் லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை சப்த கன்னிகை, ஸ்ரீ கருப்பராயர் ஆகிய பரிவார தெய்வங்க ளுடன் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (நவம்., 3ல்) நடந்தது. காலை, 9:00 மணிக்கு அனைத்து கோபுரங்களுக்கும், மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், பாலமுருகன், அன்னை ராஜராஜேஸ்வரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.