சிங்கம்புணரி: பிரான்மலை மங்கை பாகநாத சுவாமி, திருக்கொடுங்குன்றநாத சுவாமி, வடுக பைரவர் கோயில் கும்பாபிஷேகம் 27 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 12ல் நடந்தது. அன்று முதல் தினமும் மண்டல அபிஷேக சிறப்பு பூஜை நடந்தது.
நவம்பர் 7ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து 5:00 மணிக்கு முதல்கால கலச பூஜைகள், 7:00 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. நேற்று மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால கலச பூஜைகளும், 8:30 மணிக்கு ,பூர்ணாகுதி, தீபாராதனைகளும், 10:30 மணிக்கு கலச அபிசேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. பூஜையை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதின வேத சிவாகம ஸ்தானீகர் உமாபதி சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். விழா குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையிலும், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜே.சி.தனபால் முன்னிலையிலும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.