பதிவு செய்த நாள்
09
நவ
2019
02:11
பெ.நா.பாளையம்: பெரியாண்டிச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கோலாகலமாக நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பேளூர் கரடிப்பட்டி, ராமநாதபுரத்திலுள்ள பெரியாண்டிச்சியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் (நவம்., 7ல்)இரவு, 7:00 மணிக்கு, கணபதி வழிபாட்டுடன், கும்பாபிஷேக விழா தொடங்கியது.
தொடர்ந்து, முதல்கால பூஜை, சுவாமி கண்திறப்பு நடந்தது. நேற்று (நவம்., 8ல்) காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைக்கு பின், 9:00 மணிக்கு பெரியாண்டிச்சியம் மனுக்கு புனித நீரூற்றி, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பின், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு பூஜைக்கு பின், அன்னதானம் வழங்கப்பட்டது.
தீர்த்தக்குட ஊர்வலம்: கொங்கணாபுரம் அருகே, கன்னந்தேரி, வேலமுத்தான் பட்டியில், புதிதாக கட்டப்பட்ட, ஞானதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு, மூன்று நாள் யாகசாலை பூஜை, நேற்று (நவம்., 8ல்)தொடங்கியது. மேலும், கும்பாபிஷேகத்துக்கு, கல்வடங்கம் காவிரியாற்றிலிருந்து, 100க்கும் மேற்பட்டோர், தீர்த்தக்குடங்களை எடுத்து, கோவிலுக்கு வந்தனர்.