Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பலகையிட்ட படலம்! விறகு விற்ற படலம்! விறகு விற்ற படலம்!
முதல் பக்கம் » 64 திருவிளையாடல்
திருமுகம் கொடுத்த படலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 மார்
2011
03:03

காலப்போக்கில், ஹேமநாதன் மூலம் கிடைத்த பணம், மன்னர் பரிசாக அளித்தது எல்லாம் காலியாகி விட்டது. பாணபத்திரரின் குடும்பத்தில் வறுமை நிலை ஏற்பட்டது. தனக்கேற்பட்ட கதியை பெருமானிடம் சொல்லி அழுதார் அவர். அப்போது அசரீரி ஒலித்தது. பாணபத்திரா! கவலை கொள்ளாதே. இதோ! இங்கிருக்கும் படிக்கட்டில் தினமும் ஒரு பொருள் இருக்கும். அதை எடுத்துச் சென்று பிழைத்துக் கொள், என்றது குரல். இதை இறைவனின் திருவாக்காக கருதிய பாணபத்திரர் மகிழ்ச்சியடைந்தார். சொன்னது போலவே, தினமும் ஒரு பொருள் கிடைத்தது. இதைக் கொண்டு வாழ்ந்து வந்த போது, மீண்டும் அவருக்கு வறுமையை உண்டாக்கி திருவிளையாடல் புரிந்தார் ஈசன். பாணபத்திரரின் பக்தியின் பெருமையை உலகறியச் செய்யவே இவ்வாறு செய்தார் அவர். ஒருநாள் இரவில் கனவில் தோன்றிய சுந்தரேஸ்வரர், இதோ! சேரமன்னனுக்கு ஒரு திருமுகம் (திரைச்சீலையில் எழுதிய கடிதம்) தருகிறேன். இதைக் கொண்டு அவனிடம் கொடுத்து வேண்டுமளவு பொருள் பெற்றுக்கொள், என்றார்.  உடனே சோமசுந்தரக் கடவுள் வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த திருவாக்கினால் ஒரு பாடல் இயற்றினார்.

மதிமலி புரிசை மாடக்கூடற் பதிமிசை நிலவும் பால்நிற வரிச்சிற(கு) அன்னம் பயில் பொழில் ஆலவாயில் மன்னிய சிவன் யான மொழிதருமாற்றம் பருவக் கொண்மூப்படியெனப் பாவலர்க்(கு) உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமாமதிபுரை குவிவியக் குடைக்கீழ் செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க! பண்பால் யாழ்பயில் பாணபத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன்பால் காண்பது கருதிப் போந்தனன் மண்பொருள் கொடுத்து வர விடுப்பதுவே.இவ்விதம் திருப்பாசுரம் ஒன்று எழுதிக் கொடுத்து விட்டு மறைந்தருளினார். பாணபத்திரர் திடுக்கிட்டு விழிக்க, அவரது கையில் திருமுகம் இருந்தது. ஆச்சரியமடைந்த அவர், இறைவனை வணங்கி சேரநாடு சென்றார். இதற்குள் சேரமன்னனின் கனவிலும் பாணபத்திரர் வந்துள்ள தகவலை இறைவன் அறிவிக்கவே, அவனே அவர் தங்கியிருந்த இடத்தைத் தேடி வந்து அரண்மனைக்கு அழைத்துச் சென்று வேண்டுமளவு பொன்னும் பொருளும் கொடுத்தான். மீண்டும் பாண்டியநாடு திரும்பிய அவரது பெருமையை அறிந்த வரகுணபாண்டியனும், பொன்னை வாரி வழங்க பாணபத்திரர் அறவே வறுமை நீங்கப் பெற்றார்.

 
மேலும் 64 திருவிளையாடல் »
பெரிய தர்மம் செய்தால் தான் இறை ஆசி கிடைக்கும் என்பதில்லை. சிறிய தொண்டு கூட கருணையைப் பெற்றுத் தரும். ... மேலும்
 
temple news
ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் ... மேலும்
 
temple news
இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது ... மேலும்
 
temple news
மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் ... மேலும்
 
temple news
குலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar