சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 34 · 53 / 159
12 ஆண்டுகால புண்ணியம்
கும்பாபிஷேகத் தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அதாவது ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் தினமும் தவறாது கோயிலுக்கு சென்று சுவாமி, அம்பாளை வழிபடுகிறார். இது மிகவும் பெரிய விஷயம். இதனால் கிடைக்கும் புண்ணியமும் அளவில்லாதது. ஆனால் அந்தப் புண்ணியத்தை ஒரே நாளில் சுலபமாக பெற்று விடாலம். எப்படி? அந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்தை பார்த்தால் போதும். அந்த அளவில்லாத புண்ணியத்தை பெற்றுவிடலாம். இது மகான்களின் வாக்காகும். எனவே எங்கு கும்பாபிஷேகம் நடந்தாலும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.