Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூரில், விரதம் துவக்கிய ஐயப்ப ... அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவிப்பு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவிப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்தேரியில் விவசாய விளைபொருட்களுக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2019
02:11

பந்தலார்:வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில், நடந்த வயநாடன் செட்டி சங்கமம் நிகழ்ச் சியில் திரளான மக்கள் பங்கேற்றனர்.கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் வரவேற்றார்.வயநாடன் செட்டி சமுதாய தலைவர் கேசவன் செட்டி தலைமை வகித்து பேசுகையில், ”பண்டைய காலம் முதல் வயநாடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் குடியி ருந்து வரும், வயநாடன்செட்டி சமூகத்தினர், ஒன்றுகூடி ஐப்பசி மாதம், 30 நாள் விருசிக சங்கமம் தின விழா நடத்துகிறோம்.

”இதில் ஊர்வலம், கலாசார நிகழ்ச்சிகள், மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான கூட்டம் நடத்தப்
படுகிறது. மக்கள் அனைவரும் விவசாயத்தில் செழிப்பு பெறவும், ஒற்றுமையுடன் வாழவும் இந்த நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்கிறோம்,” என்றார்.தொடர்ந்து நடந்த ஊர்வலத்தை பத்தேரி நகராட்சி தலைவர் சாபு துவக்கி வைத்து பேசுகையில், ”வயநாட்டின் விவசாயம் செட்டி சமுதாய மக்கள் கையில்தான் உள்ளது. ஆகவே விவசாயத்தின் வளர்ச்சிக்காக தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் இந்த சமூகத்தினர் மேலும் வளர்ச்சி காண வேண்டும்,” என்றார்.

தொடர்ந்து, ஊர்வலம் சுங்கம் வரை சென்று கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கு செட்டி சமுதாய குடும்பத்தினர் விவசாயம் செய்து கொண்டு வந்த அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்கள், காணிக்கையாக வழங்கி, உணவு சமைத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும், எருமாடு சிவன் கோவில்,ஐயங்கொல்லி, வாளாடு,பொன்னானி மகா விஷ்ணு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நாளின் முக்கிய நிகழ்வாக, இளைஞர்களுக்கு, பெண் பார்க்கும் படலமும் நடந்தது.தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு, 101 தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செய்யப்பட்டது. பின், அனைவரும் கலைந்து சென்றனர். நிகழ்ச்சியில், வயநாடன் செட்டி, தமிழ்நாடு பிரிவு தலைவர் ஸ்ரீதரன், நிர்வாகிகள் வாசு, ஜெயச்சந்திரன், வேணுகோபால் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் மற்றும் மக்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான இன்று ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar