ராமரின் பட்டாபிஷேகத்துக்குரிய ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடந்து கொண்டிரு க்கின்றன. இதை அறிந்த ராமர், லட்சுமணனிடம் கூறுகிறார், “தம்பி லட்சுமணா! எனக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு மும்முரமாக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் தம்பி! மணிமுடியை உனது மகிழ்ச்சிக்காகவே நான் ஏற்றுக்கொள்ள விரும்புகி றேனே தவிர, எனக்கென்று எந்த விருப்பமுமில்லை. ஏனென்றால், என் உடலை விட்டு வெளியில் உலவிக்கொண்டிருக்கும் என் உயிரல்லவா நீ!”