ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் உலா வரும் மாடுகளால், பக்தர்கள் அச்சத்துடன் நீராடி செல்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிறகு கோயிலுக்குள் தீர்த்தங்களில் நீராடுவார்கள். ஆனால் அக்னி தீர்த்த கடலில் உலா வரும் ஏராளமான மாடுகள் பக்தர்களை அச்சுறுத்துகின்றன.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அக்னி தீர்த்த கரையில் மாடுகள் உலா வர அனுமதிக்க கூடாது, என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மேலும் அக்னி தீர்த்த கரையில் மாடுகளுக்கு தானம் வழங்க பக்தரிடம் கீரை விற்கும் வியாபாரிகள் அதிகரித்துள்ளனர். இதனால் பக்தரிடம் கீரை உண்ணும் ஆவலில் கூட்ட நெரிசலில் பக்தர்களை முட்டி தள்ளி விட்டு ஆவேசமாக மாடுகள் ஓடுவதால் பக்தர்கள் காயம் அடைகின்றனர். எனவே அக்னி தீர்த்த கரையில் உலா வரும் மாடுகளை வெளியேற்றி, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட வேண்டும்.