Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகுண்ட ஏகாதசி: வைணவ தலங்களில் பரமபத ... உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு உலகளந்த பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரியகோவிலில் கலச திருப்பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரியகோவிலில் கலச திருப்பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

06 ஜன
2020
10:01

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் பெரியகோவிலில் கும்பாபிஷேகத்தை விழாவையொட்டி, 12 அடி உயரமுள்ள விமான கோபுர கலச திருப்பணி செய்ய இறக்கப்பட்டு, பணிகள் துவக்கியது.

தஞ்சாவூர் பெரியகோவிலில்  23 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற பிப். 5ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான திருப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  216 அடி உயரத்தில், விமானத்தில் இருந்த கலசத்தை திருப்பணி செய்யவதற்காக, நேற்று காலை கீழே இறக்கும் பணி தொடங்கியது. இதற்கு முன்பாக இக்கலசத்தின் தன்மை குறித்து கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆய்வு மையத்தின் கதிரியக்கப் பிரிவு இயக்குநர் வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினரும், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக உலோகவியல் துறைப் பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் குழுவினரும் ஆய்வு செய்தனர்.

அப்போது, கலசம் 12 அடி உயரமும், நான்கரை அடி அகலமும் இருப்பது தெரிய வந்தது. மேலும், செம்பு உலோகத்தால் செய்யப்பட்டுள்ள இக்கலசத்தின் உள்ளே 8 மூட்டைகள் அளவுக்கு வரகு கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இக்கலசம் எட்டு பாகங்களாக இருந்தன. இதில், 3 பெரிய பாகங்களும், 5 சிறிய பாகங்களும் உள்ளன. இதையடுத்து, விநாயகர் பூஜை நடத்தப்பட்டு, பாகங்களை பிரித்து, 4 மணி நேரத்திற்கு பிறகு, மாலையில் கீழே கொண்டு வரப்பட்டது. இதை சுத்தம் செய்து, தங்க முலாம் பூசப்பட்டு, மீண்டும் பொருத்தப்படும் என, கும்பாபிஷேக விழா குழுத் தலைவர் திருஞானம் தெரிவித்தார். இதேபோல, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட சன்னதிகளின் உள்ள கலசங்களிலும் திருப்பணி செய்யப்பட உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
நாமக்கல்: ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மூன்று டன் பல்வேறு வகையான ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சென்னை; 2026ம் ஆண்டின் முதல் நாளான இன்று வடபழநி முருகன் கோவிலில் அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar