பதிவு செய்த நாள்
13
ஜன
2020
05:01
விருச்சிக ராசி அன்பர்களே!
குருவின் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். சுக்கிரன் பிப்.4ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். இந்த மாதம் சூரியன் சாதகமாக ராசிக்கு 3ம் இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் ஜன.22ல் புதன் ராசிக்கு 4ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம். அப்போது பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். ஜன.22க்கு பிறகு கணவன், மனைவி இடையே பாசம் மேலோங்கும்.
சமூகத்தில் மதிப்பு உயரும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும். பிப்.4க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி மேலோங்கும்.
பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அண்டை வீட்டாரின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். ஜன. 22க்கு பிறகு பணிபுரியும் பெண்களுக்கு பணியிடத்தில் நற்பெயர் கிடைக்கும். சுய தொழில் செய்யும் பெண்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். பிப்.7 க்கு பிறகு சிலரது வீட்டில் திருட்டு போகலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் கவனமாக இருக்கவும். உடல்நிலை சீராக இருக்கும். கண் நோயால் அவதிப்பட்டவர்கள் குணம் பெறுவர்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு பகைவர் தொல்லை, அரசு பிரச்னை, அனுகூலமற்ற போக்கு முதலியன ஜன.22க்கு பிறகு மறையும். அதுவரை வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பிப்.4க்கு பிறகு கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.
* வியாபாரிகளுக்கு சூரியனால் லாபம் அதிகரிக்கும். பிப்.4க்கு பிறகு ஆன்மிகம் தொடர்பான தொழில் சிறந்து விளங்கும்.
* தரகு, கமிஷன் தொழிலில் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவர்.
* தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் கவலை முதலியன ஜன.22க்கு பிறகு மறையும். அதன் பின் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.
* ஐ.டி., துறையினர் ஜன.22க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைப்பது நல்லது.
* மருத்துவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கைகள் நிறைவேறப் பெறுவர்.
* வக்கீல்கள் ஜன.22க்கு பிறகு வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவர். வருமானம் உயரும்.
* ஆசிரியர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு உயரும். எதிரியும் கூட சரணடையும் நிலை வரலாம்.
* அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்க யோகம் உண்டு.
* கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பிப்.4க்கு பிறகு சக கலைஞர்கள் மூலம் வருமானம் உயரும்.
* விவசாயிகள் ஜன.22க்கு பிறகு பாசிப்பயறு, நெல், கொண்டைக் கடலை, மஞ்சள் மூலம் அதிக வருமானம் கிடைக்கப் பெறுவர்.
* மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று முன்னேறுவர். போட்டிகளில் வெற்றி காண்பர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் தொழிலை விரிவுபடுத்த வேண்டாம். முதலீட்டை அதிகப்படுத்தாமல் இருப்பதை தக்க வைத்துக் கொள்வது நல்லது.
* வியாபாரிகள் சக வியாபாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் முக்கிய பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். சக ஊழியர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஜன.22க்கு பிறகு மறையும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். உழைப்புக்கு ஏற்ற மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.
* அரசியல்வாதிகள் வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். சமரச முயற்சியில் ஈடுபடுவது நல்லது.
* விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது. பணப் பயிர்களை பயிரிட வேண்டாம். வழக்கு விவகாரங்களில் சமரச தீர்வு காண்பது நல்லது.
பரிகாரம்:
* சனிக்கிழமை பெருமாளுக்கு அர்ச்சனை
* பவுர்ணமியன்று அம்மனுக்கு மாவிளக்கு
* வெள்ளியன்று மகாலட்சுமிக்கு நெய்தீபம்
* நல்ல நாள்: ஜன.15,16,17,20,21,24,25,26 பிப்.1,2,3,4,5,10,11,12
கவன நாள்: பிப்.6,7 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,7
* நிறம்: வெள்ளை, மஞ்சள்