துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) குடும்பத்தில் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2020 05:01
துலாம் ராசி அன்பர்களே!
இந்த மாதம் புதன் ஜன. 22 வரை மகர ராசியில் இருந்தும், சுக்கிரன் பிப்.4 வரை கும்ப ராசியில் இருந்தும் நன்மை செய்வர். செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து பிப்.9ல் தனுசு ராசிக்கு மாறி சிறப்பான பலன் தருவார். மேலும் கேது, சனி பகவானின் நன்மைகளும் மாதம் முழுவதும் கிடைக்கும். அவர்கள் முயற்சியில் அனுகூலம், பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தெய்வ அனுகூலத்தை தருவார்கள்.
சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பொன், பொருள் சேரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஜன.22க்கு பிறகு பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம். ஒருவருக்கொருவர் பொறுமையுடன் விட்டுக்கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம் கவனம். பெண்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவீர்கள். ஆடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். பிப்.9க்கு பிறகு புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவர். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். * தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் வேலையில் திருப்தி காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். * ஐ.டி., துறையினருக்கு மாத தொடக்கத்தில் உயர் பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். * வக்கீல்கள் தடைகளை முறியடித்து நன்மை கிடைக்கப் பெறுவர். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். * போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் பிப்.9க்கு பிறகு உன்னதமான பலன் அடைவர். நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறும். முக்கிய கோரிக்கைகள் அப்போது வைப்பது நல்லது. * அரசியல்வாதிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பிப்.9க்கு பிறகு எதிர் பார்த்த பதவி கிடைக்கும் * அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பலன் கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் புகழ், கவுரவம் மேலோங்கும். * கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை கிடைக்கப் பெறுவர். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். * விவசாயிகள் சீரான வளர்ச்சி காண்பர். காய்கறி, கீரை வகைகள், பழ வகைகள் ஆகியவற்றில் அதிக மகசூல் காணலாம். பிப்.9க்கு பிறகு புதிய சொத்து வாங்கலாம். நிலம் தொடர்பான பிரச்னை மறையும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். * பண்ணை தொழில் ஆடு,கோழி, பசுக்கள், கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம். * பள்ளி மாணவர்கள் ஜன. 21 வரை வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை காண்பர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு சூரியனால் பெண்களிடம் விரோதம் ஏற்படலாம். * வியாபாரிகளுக்கு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. * அரசு வேலையில் இருப்பவர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். சக பணியாளர்களிடம் நிதானம் பின்பற்றவும். * தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஜன.22க்கு பிறகு மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. ஆனால் உழைப்புக்கு ஏற்ற மதிப்பு கிடைக்கும். * மருத்துவர்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. * ஆசிரியர்கள் ஜன. 22க்கு பிறகு கடின உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். * கல்லூரி மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். இல்லாவிட்டால் வீண் பிரச்னைக்கு ஆளாகலாம். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்கவும்.
பரிகாரம்: * வியாழனன்று தட்சிணாமூர்த்தி தரிசனம் * தினமும் காலையில் நீராடி சூரிய வழிபாடு * வெள்ளிக்கிழமை பத்ரகாளிக்கு நெய் விளக்கு
* நல்ல நாள்: ஜன.15,18,19,22,23,29,30,31 பிப்.1,2,8,9,10,11 * கவன நாள்: பிப்.3,4,5 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 5,7 * நிறம்: சிவப்பு, பச்சை
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »