Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூண்டா மணிவிளக்கு... விளக்கம் என்ன? வீட்டில் துளசி செடி வளர்ப்பதற்கு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இதுதான் கீதை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
02:02

காந்திஜிக்கு கீதை என்றால் உயிர். தினமும் அதன் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து விடுவார். விபரமறிந்தவர்களே கீதையை படிக்க வேண்டுமானால் பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டிய நிலையில், சாதாரணமானவர்கள் ‘ஆளை விடுங்க சாமி!’ என ஓடி விடுவார்கள். ஆனால், ‘கற்றலின் கேட்டலே எளிது’ என்பதில் நம்பிக்கையுடைய ஒரு நண்பர், காந்திஜியைப் பார்க்க வந்தார்.  “ஜி! தாங்கள் கீதையில் பெரிய வல்லுநர். எனக்கும் அதன் சாரத்தைக் கற்றுத் தரவேண்டும்,” என்றார்.  காந்திஜி சிரித்துக் கொண்டார். “சரி.. சரி... ஆஸ்ரமத்தில் சில பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.


வண்டி வண்டியாகச் செங்கல் வந்து இறங்குகிறது. வண்டிக்கு எத்தனை செங்கல் வந்து இறங்குகிறது என்று என்னிடம் கணக்கு கொடுங்கள்,” என்றார். வந்தவரும் வேலையை முடித்தார். மறுநாளும் அதே வேலையைக் கொடுத்தார் காந்திஜி. இப்படியே சில நாட்கள் தொடர, வந்தவர் பொறுமை இழந்து விட்டார்.  “ஜி! நான் தங்களிடம் கீதை கேட்க வந்தால், நீங்கள் என்னைக் கூலிக்காரனைப் போல வேலை வாங்குகிறீர்களே! எப்போது கீதை கற்றுத் தரப் போகிறீர்கள்?” என்றார் விரக்தியுடன்.  “அது தான் கற்றுத் தந்தாகி விட்டதே” என்றார் காந்திஜி. “என்ன சொல்கிறீர்கள்?” என்று அதிர்ச்சியுடன் கேட்ட நண்பருடன் உரையாடலைத் தொடர்ந்தார் காந்திஜி. “இத்தனை நாள் செய்த வேலைக்கு கூலி வாங்கினீர்களா?” “இல்லை”  “இந்த வேலையைச் செய்ததால் உங்களுக்கு ஏதாவது பலன் கிடைத்தா? “அதுவும் இல்லை”. பலன் கருதாமல், தன்னலமே இல்லாமல், பிறருக்காக பணி செய்வதென்பது தான் கீதையின் சாரம். இதைச் செய்தாலே கீதை படித்த மாதிரி தான்,” என்றார் காந்திஜி. நண்பர் நெகிழ்ந்து போனார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar