Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலமேடு கோயில் விழா தள்ளிவைப்பு தீர்த்தமலையில் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில எல்லையில் கோவில்களில் தரிசனத்திற்கு தற்காலிக தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2020
02:03

ஓசூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மாநில எல்லையில் உள்ள கோவில்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தற்காலி தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அம்மாநிலத்தில் மக்கள் அதிகமாக கூடும் மால், வணிக வளாகங்கள், தியேட்டர்களை மூட, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி உட்பட மொத்தம், 16 இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளித்த பின் தான், தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் அரசு பஸ்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், தமிழக எல்லையான ஓசூரில் பரவுவதை தடுக்கும் வகையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், நேற்று காலை முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தினமும் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தில் இருந்து அதிகளவு பக்தர்கள் வந்து செல்லும் வகையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, ஹிந்து அறநிலையத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. அதேபோல், ஓசூர் வெங்கடேஷ் நகர் மலை மீதுள்ள பெருமாள் கோவில் மற்றும் நகரேஸ்வரர், சோமேஸ்வரர், கோதண்டராமர் கோவில்களிலும், பக்தர்கள் தரிசனத்திற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஆகம விதிப்படி சுவாமிக்கு மூன்று நேர பூஜை மற்றும் நெய்வேத்தியம் செய்யப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று இந்திர விமானத்தில்  மீனாட்சி திக்குவிஜயம் செய்கிறாள். ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.புதுச்சேரி இ.சி.ஆர்., ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
புவனகிரி: புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் ஜெயந்தி விழா, சங்காபிஷேகத் துடன் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் ரூ.4.50 கோடி மதிப்பில் தங்கத் தேர் செய்யும் பணியை விரைந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar