Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீர்த்தமலையில் பக்தர்களுக்கு ... கொரோனாவால் வெறிச்சோடிய குன்றக்குடி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் பங்குனி பொங்கல் விழா ஒத்திவைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2020
02:03

 விருதுநகர்: விருதுநகர் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒத்தியவைத்ததோடு, நாடார்கள் தேவஸ்தானம் ஐந்து கோயில்களிலும் மார்ச் 31 ம்தேதி வரை பக்தர்கள் வழிபாடுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா காப்புகட்டுடன் கடந்த மார்ச் 15ல் துவங்கியது. மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து தேவஸ்தான நிர்வாகம் மார்ச் 29ல் நடக்க வேண்டிய கொடியேற்றத்தை ஏப்ரல் 1 க்கு மாற்றியது. வழக்கம் போல் அந்தந்த தேதிகளில் பொங்கல், அக்னிசட்டி, தேரோட்டம் நடக்கும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று கலெக்டர் கண்ணன் கோயில் வழிபாட்டு தலங்களுக்கு மார்ச் 31 வரை பக்தர்கள் வழிபாட்டுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகிகள் கூறியதாவது அரசு ஆணையின் படி விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா மறுதேதியின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு மறு உத்தரவுக்கு பின் விழா தேதி நிர்ணயம் செய்யப்படும். தேதி நிர்ணயிக்கப்பட்ட பின் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தலாம். இத்தடையானது தேவஸ்தானம் உட்பட்ட 5 கோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம்போல் கோயில்களில் நித்திய பூஜைகள் நடக்கும். பக்தர்களுக்கு அனுமதியில்லை ,என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar