கிரகங்கள் ஒன்பதில் ஏழிற்கு ஏழு கிழமைகள் உள்ளன. ராகு, கேதுவுக்கு கிழமைகள் கிடையாது. இதனாலேயே ஒவ்வொரு நாளிலும் ஒன்றரை மணி நேரம் ராகுகாலம் என ராகுவிற்காகவும், எமகண்டம் என கேதுவிற்காகவும் அமைந்துள்ளது. ராகுவிற்கு அதிதேவதையாக துர்கையம்மன் இருப்பதால் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கையை வழிபட்டால் ராகு தோஷங்கள் நீங்கி திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.