Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் கோவில் கட்டுமானம் நாளை ... மாமல்லை சிற்பங்கள் திறக்க வாய்ப்பில்லை மாமல்லை சிற்பங்கள் திறக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் 2 மணி நேரத்தில் 1,200 பேர் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருமலையில் 2 மணி நேரத்தில் 1,200 பேர் தரிசனம்

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2020
11:06

திருப்பதி; திருமலையில், இரண்டு மணி நேரத்தில், 1,200 பேர் ஏழுமலையானை தரிசித்ததாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், சுப்பாரெட்டி தெரிவித்தார்.

திருமலையில் நேற்று, தேவஸ்தான ஊழியர்களை வைத்து, சோதனை முறை தரிசனம் துவங்கப்பட்டது. இது குறித்து, அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:திருமலையில், 79 நாட்களுக்கு பின், நேற்று தரிசனம் துவங்கப்பட்டது.

தேவஸ்தான ஊழியர்கள், திருப்பதியில் உள்ள அலிபிரியில், முகக் கவசம் அணிந்து, தெர்மல் ஸ்கேனிங் முடித்து, தங்கள் உடமைகள் மற்றும் வாகனங்களை, துாய்மை செய்து, திருமலையை அடைந்தனர்.அங்கு ஏற்படுத்தப்பட்ட, இரண்டு தரிசன நுழைவாயில்களிலும், பக்தர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. பின், சமூக இடைவெளியுடன், ஊழியர்கள் தரிசனத்திற்கு சென்றனர்.ஒரு மணி நேரத்திற்கு, 500 பேர் என, அதிகாரிகள் தோராயமாக கணக்கிட்டனர். ஆனால், இரண்டு மணி நேரத்தில், 1,200 பேர் தரிசனம் செய்தனர். மூன்று நாட்கள் சோதனை முடித்த பின், ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை, படிப்படியாக உயர்த்தப்படும்.மேலும், தரிசனத்திற்கு செல்பவர்கள் கிரில் கம்பிகள், கதவுகள், சுவர்கள் உள்ளிட்டவற்றை தொடாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தரிசன வரிசை, கோவிலுக்குள் உள்ள குடிநீர் குழாய்களில், கையால் தொடாமல், நீர் அருந்தும் விதம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பக்தர்களுக்கு அருகாமையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பி.பி.இ., கிட்கள் வழங்கப்பட்டுள்ளன. பக்தர்கள் கூடும் இடங்களில், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, கிருமிநாசினி திரவம் தெளிக்கப்படுகிறது.கோவில் முழுதும் நேற்று மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தொடர்புடைய அனைத்து கோவில்களிலும், நேற்று தரிசனம் துவங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar