Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் கோவில் கட்டுமானம் நாளை ... மாமல்லை சிற்பங்கள் திறக்க வாய்ப்பில்லை மாமல்லை சிற்பங்கள் திறக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் 2 மணி நேரத்தில் 1,200 பேர் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருமலையில் 2 மணி நேரத்தில் 1,200 பேர் தரிசனம்

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2020
11:06

திருப்பதி; திருமலையில், இரண்டு மணி நேரத்தில், 1,200 பேர் ஏழுமலையானை தரிசித்ததாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், சுப்பாரெட்டி தெரிவித்தார்.

திருமலையில் நேற்று, தேவஸ்தான ஊழியர்களை வைத்து, சோதனை முறை தரிசனம் துவங்கப்பட்டது. இது குறித்து, அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:திருமலையில், 79 நாட்களுக்கு பின், நேற்று தரிசனம் துவங்கப்பட்டது.

தேவஸ்தான ஊழியர்கள், திருப்பதியில் உள்ள அலிபிரியில், முகக் கவசம் அணிந்து, தெர்மல் ஸ்கேனிங் முடித்து, தங்கள் உடமைகள் மற்றும் வாகனங்களை, துாய்மை செய்து, திருமலையை அடைந்தனர்.அங்கு ஏற்படுத்தப்பட்ட, இரண்டு தரிசன நுழைவாயில்களிலும், பக்தர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. பின், சமூக இடைவெளியுடன், ஊழியர்கள் தரிசனத்திற்கு சென்றனர்.ஒரு மணி நேரத்திற்கு, 500 பேர் என, அதிகாரிகள் தோராயமாக கணக்கிட்டனர். ஆனால், இரண்டு மணி நேரத்தில், 1,200 பேர் தரிசனம் செய்தனர். மூன்று நாட்கள் சோதனை முடித்த பின், ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை, படிப்படியாக உயர்த்தப்படும்.மேலும், தரிசனத்திற்கு செல்பவர்கள் கிரில் கம்பிகள், கதவுகள், சுவர்கள் உள்ளிட்டவற்றை தொடாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தரிசன வரிசை, கோவிலுக்குள் உள்ள குடிநீர் குழாய்களில், கையால் தொடாமல், நீர் அருந்தும் விதம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பக்தர்களுக்கு அருகாமையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பி.பி.இ., கிட்கள் வழங்கப்பட்டுள்ளன. பக்தர்கள் கூடும் இடங்களில், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, கிருமிநாசினி திரவம் தெளிக்கப்படுகிறது.கோவில் முழுதும் நேற்று மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தொடர்புடைய அனைத்து கோவில்களிலும், நேற்று தரிசனம் துவங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar