Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகம் முழுவதும் ஒளிபரப்பான ... விநாயகர் சிலை வைக்க அனுமதி? எதிர்பார்ப்பில் சிலை தயாரிப்பாளர்கள் விநாயகர் சிலை வைக்க அனுமதி? ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தன் கருணையால் துன்பம் விலகும்: காமாட்சிபுரி ஆதீனம்
எழுத்தின் அளவு:
கந்தன் கருணையால் துன்பம் விலகும்: காமாட்சிபுரி ஆதீனம்

பதிவு செய்த நாள்

11 ஆக
2020
09:08

பல்லடம்: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் கந்தசஷ்டி பாராயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருப்பர் கூட்டத்தை கண்டித்து, வேல் பூஜை, மற்றும் கந்த சஷ்டி பாராயணம் நடைபெறும் என, ஆதீனங்கள் அறிவித்திருந்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம், வேல் பூஜை, மற்றும் பாராயணம் நடந்தது.

பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில் கடந்த வேல் பூஜையை நடத்தி வைத்து காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறுகையில், "தீயவர்களை அழிக்க சிவனின் நெருப்பில் இருந்து தோன்றியவர் முருக பெருமான். உலகையே அச்சுறுத்தி வந்த சூரபத்மனை, முருக பெருமான் வதம் செய்து, மக்களை காத்ததாக வரலாறு கூறுகின்றது. அவ்வகையில், இன்று இயற்கை சீற்றம், மற்றும் நோய் தொற்று காரணமாக உலகமே அல்லோலப்பட்டு வருகிறது. கந்தனின் கருணையால் மட்டுமே, இதுபோன்று துன்பங்களிலிருந்து விடுபட முடியும் என்பது மக்களின் நம்பிக்கை. இதற்காகவே, ஆதீனங்கள், சிவனடியார்கள், மற்றும் ஆன்மிக பெரியோர்களின் அறிவுரையின்படி, வேல் பூஜை, மற்றும் கந்த சஷ்டி கவச பாராயணம், தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. முருக பெருமானை வழிபட்டு, துன்பங்களிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். வரலாற்றில் இதுவரை நிகழாத வகையில், கோவில்கள் பூட்டப்பட்டு இருக்கின்றன. எனவே, நோய் துன்பங்கள் நீங்கி, கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, சஷ்டி தினமான நேற்று முன்தினம், மாலை 6.00 மணிக்கு, காமாட்சிபுரி ஆதீனம் வேல் பூஜையை நடத்தி கொடுத்தார். தொடர்ந்து, கந்த சஷ்டி கவச பாராயணம், மற்றும் சிவ பெருமானுக்கு பூஜைகளும் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar