Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: சொத்து யோகம் மீனம்: அபார ஆற்றல் மீனம்: அபார ஆற்றல்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கும்பம்: பதவி உயரும்
எழுத்தின் அளவு:
கும்பம்: பதவி உயரும்

பதிவு செய்த நாள்

15 ஆக
2020
11:08

குடும்பத்தினரை நேசிக்கும் கும்ப ராசி அன்பர்களே!
மாதம் முழுவதும் செவ்வாய், குரு, சனி நன்மை தருவார்கள். சுக்கிரன் ஆக.31 வரை சாதகமான நிலையில் இருந்து நற்பலன் கொடுப்பார். அதன் பிறகு அவர் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை கொள்ளத் தேவையில்லை. காரணம் புதன் ஆக. 30ல் சாதகமான இடத்திற்கு வந்து நற்பலன் தருவார். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர்.

ராகு செப்.1ல் 4-ம் இடமான ரிஷபத்திற்கு வருவதால் வீண் அலைச்சல், சிறுசிறு பிரச்னை உருவாகலாம். கேது செப்.1ல் 10ம் இடமான விருச்சிகத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம்  என்று சொல்ல முடியாது. இங்கு அவர் உடல் உபாதையை தரலாம். குடும்பத்தில் தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க அனுகூலம் உண்டாகும். ஆக.31க்கு பிறகு சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும்.
பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். ஆடை, ஆபரணம் வாங்கலாம். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும்  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருட்கள் கிடைக்க பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ஆக.31க்கு பிறகு அண்டை வீட்டாரால் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு. கவனம் தேவை. சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். ஆக.31க்கு பிறகு உஷ்ணம், தோல் தொடர்பான நோய் வரலாம்.  பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்
* தொழிலில் பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். சிலர் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். கோயில், புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.
* வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். அடையும்.தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
* தரகு, கமிஷன் தொழிலில் பெண்கள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். ஆனால் அலைச்சலை தவிர்க்க முடியாது.
* தனியார் துறையினர் நல்ல முன்னேற்றத்தை காணலாம். கோரிக்கைகளை ஆக.29க்குள் கேட்டு பெறலாம்.
* ஐ.டி.,துறையினர் ஆக.31க்கு பிறகு பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* மருத்துவர்கள் ஆர்வமுடன் பணியில் ஈடுபடுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை உருவாகும்.
* வக்கீல்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். அதிர்ஷ்டவசமாக வருமானம் உயரும்.
* ஆசிரியர்களுக்கு வேலைப்பளு குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர்.
* போலீஸ், ராணுவத்தினர் சிறப்பான வளர்ச்சி காண்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகஉழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது. பொதுநல சேவகர்களுக்கு இடர்பாடுகள் மறையும்.
* விவசாயிகள் கூடுதல் வருமானம் கிடைக்கப் பெறுவர். குறிப்பாக பழ வகைகள், கிழங்கு வகைகள் மூலம் அதிக லாபம் காணலாம்.  பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்த தொல்லை மறையும்
* மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் வெற்றி காணலாம். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். ஆசிரியர்கள் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும்.
   
சுமாரான பலன்கள்
*அரசு பணியாளர்களுக்கு ஆக.29 க்கு பிறகு குழப்பம் நிலவும். மனக்கவலை ஏற்படலாம். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும்.
* தனியார் துறையினருக்கு ஆக.29 க்கு எதிலும் பொறுமை தேவை. சிலர் பணிச்சுமையால் அவதிப்பட நேரிடலாம்.
* கலைஞர்களுக்கு ஆக.31க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்பட வாய்ப்புண்டு.
 நல்லநாள் ஆக. 17,18,19,20,26,27,28,29 செப்.1,2,3,6,7,8,13,14,15,16
  கவனநாள் ஆக. 21,22 சந்திராஷ்டமம்
  அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: மஞ்சள்  சிவப்பு

பரிகாரம்:

* அதிகாலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
* புதன்கிழமையில் குலதெய்வ வழிபாடு
* வெள்ளிக்கிழமை அம்மனுக்கு நெய்தீபம்

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar