Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேரள கோவில்களின் 1000 கிலோ தங்கம்: ... விளையாட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விளையாட்டு மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் திருவோண பூஜைகள் தொடக்கம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் திருவோண பூஜைகள் தொடக்கம்

பதிவு செய்த நாள்

31 ஆக
2020
08:08

சபரிமலை:சபரிமலையில் திருவோண பூஜைகள் தொடங்கின. ஊழியர்கள் அத்தப்பூ கோலமிட்டனர். தந்திரி ஓண விருந்தை தொடங்கி வைத்தார்.

திருவோண பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிேஷகம், கணபதி ேஹாமம் நடைபெற்றது.உஷபூஜைக்கு பின்னர் புதிய கீழ்சாந்தி (உதவி பூஜாரி)தேர்வு நடைபெற்றது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முக தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஹரிப்பாட்டை சேர்ந்த சங்கரன் நம்பூதிரி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவி காலம் ஒரு ஆண்டாகும். மேல்சாந்திக்கு உதவியாக நைவேத்யம் செய்வது உள்ளிட்ட பணிகளை இவர் மேற்கொள்வார். இதில் தேவசம்போர்டு தலைவர் வாசு, உறுப்பினர்கள் விஜயகுமார், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.திருவோணத்துக்கு முந்தைய நாள் நடைபெறும் திருவோண சத்ய என்ற ஓண விருந்து மதியம் நடைபெற்றது. பக்தர்கள் அனுமதிக்கப் படாததால் ஊழியர்களுக்காக சிறிய அளவில் நடத்தப்பட்டது. ஊழியர்கள் நேற்று கோயிலின் வலது பக்கம் பெரிய அளவில் அத்தப்பூக்கோலம் அமைத்திருந்தனர். அதில் கோயிலின் முன்பகுதியில் அமைக்கப்பட்டள்ள தத்வமசி என்ற வார்த்தை பூக்களால் அமைக்கப்பட்டிருந்தது. நீ தேடும் கடவுள் நீதான் என்பது இதன் பொருளாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar