பதிவு செய்த நாள்
16
செப்
2020
08:09
சூரியனால் இந்த மாதம் நன்மைகள் தொடரும். சுக்கிரன் செப்.28 வரை நற்பலன் கொடுப்பார். புதன் செப். 21 வரையும், அக்.7 க்கு பிறகும் நற்பலன் தருவார். குரு, செவ்வாயால் மாதம் முழுவதும் நன்மை கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணப்புழக்கம் இருக்கும். எந்த செயலையும் கச்சிதமாக செய்து முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
குடும்பத்தில் வருமானம் உயரும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். பெண்களால் நன்மை கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். சகோதரிகளால் பொன், பொருள் சேரும். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். சனிபகவானின் 10ம் இடத்துப் பார்வை சாதகமாக உள்ளதால் பொன், பொருள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர்.
வீடு, மனை என புதிதாக சொத்து வாங்க அனுகூலம் உண்டு. கணவரிடம் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறலாம். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் நற்பலன் கிடைக்கப் பெறுவர். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். உடல்நலம் மேம்படும். மருத்துவச் செலவுகள் குறையும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும்.
* வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பர். புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகை வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
* தரகு, கமிஷன் தொழிலில் வருமானம் படிப்படியாக உயரும்.
* அரசு ஊழியர்கள் நல்ல வளர்ச்சி காணலாம். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். புதிய பதவி தேடி வரும். உடன் பணிபுரிவோர் ஆதரவுடன் இருப்பர்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில் தடையிருக்காது. சகஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அதிகாரிகளின் ஆதரவும் வந்து சேரும்.
* மருத்துவர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.
* ஆசிரியர்களுக்கு திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். வேலைபளு குறையும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.
* அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
* பொதுநல சேவகர்கள் சிறப்பான புகழ், வருமானத்தை பெற்று மகிழ்வர்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயரும்
* விவசாயிகள் சிறப்பான மகசூல் கிடைக்கப் பெறுவர். மஞ்சள், பாசிப்பயறு, துவரை, கொண்டைக்கடலை, காய்கறி, பழவகைகள் மூலம் வருமானம் காணலாம். பக்கத்து நிலத்தின் வகையில் இருந்த தொல்லை மறையும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக இருக்கும்.
* விவசாயிகள் கால்நைடை நல்ல வருமானத்தை பெறுவர்.
* மாணவர்கள் கலைப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். பாடத்தில் மட்டும் அல்லாமல் விளையாட்டிலும் ஆர்வமுடன் ஈடுபடுவர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் செப்.21 – அக்.7 வரை நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருக்காதீர்கள். மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறு வரலாம். எனவே அவர்கள் பக்கம் ஒருகண் இருப்பது நல்லது
* ஐ.டி., துறையினர் கோரிக்கைகளை செப்.28க்குள் கேட்டு பெறவும். அதன் பிறகு சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம். பொருள் விரயம் ஏற்படலாம்.
* வக்கீல்கள் செப். 21 – அக். 7 வரை வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
* கலைஞர்கள் செப்.28க்கு பிறகு எதிரி தொல்லை, அவப்பெயர், போட்டிகள் ஏற்படலாம். புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.
நல்ல நாள்: செப்.17,18,19,22,23,26,27,28 அக்.3,4,5,6,7,13,14,15,16.
கவன நாள்: அக்.8,9,10 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,3,9 நிறம்: சிவப்பு, மஞ்சள்
பரிகாரம்:
* சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை
* முடிந்தவரை ஏழைகளுக்கு உளுந்து தானம்
* வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு பாயாசம்