பதிவு செய்த நாள்
16
செப்
2020
08:09
சூரியன் சாதகமான இடமான கன்னி ராசிக்கு வருவதால் குடும்பத்தில் குதுாகலம் அதிகரிக்கும். ராகுவின் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். புதன் செப்.21 இடம் மாறினாலும் சுக்கிரன் செப். 29ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். இதனால் உங்களுக்கு ஏற்பட்ட பொல்லாப்பு மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சனிபகவானின் 3ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளதால் எண்ணிய செயல் இனிதே நிறைவேறும். பொருளாதாரம் மேம்படும். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்களின் வசம் ஒப்படையுங்கள்.
குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். வீட்டில் மங்களகரமான சூழல் உருவாகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வீண்பிரச்னைகள் அடியோடு மறையும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். உங்கள் முனனேற்றத்திற்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர். குறிப்பாக அவர்கள் மூலம் பொன், பொருள் சேரும்.. பெண்களால் நற்சுகம் கிடைக்கும். உற்றார், உறவினர் வகையில் கருத்துவேறுபாடுகள் வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.
பெண்களுக்கு சகோதரர்களின் ஆதரவு இருக்கும். அவர்களால் பண உதவி கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களால் குடும்பம் சிறப்படையும். கணவர், குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரம் செய்யும் பெண்கள் கூடுதல் வருமானத்தை பெறுவர். உடல்நலனில் அக்கறை தேவை. பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பொருள் விரயம் ஏற்படலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலில் லாபம் அதிகரிக்கும். தடைகள் அனைத்தும் விலகும். இதனால் கூடுதல் வளர்ச்சியை காண்பீர்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர், பெண்களை பங்குதாரராக கொண்ட வணிகம் சிறப்படையும். பங்கு வர்த்தகம் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.
* வியாபாரிகள் எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவர். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். எதிர்பாராமல் வருமானம் உயரும்.
* தரகு,கமிஷன் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சியடைவீர்கள்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு புதனால் உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு. பணப்புழக்கத்தால் தேவைகள் பூர்த்தியாகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.
* ஐ.டி., துறையினர் திறமைக்கேற்ப வளர்ச்சி காண்பர். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* மருத்துவர்கள் பெண்களின் அனுகூலத்தால் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவர்.
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.
* ஆசிரியர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும்.
* பொதுநல சேவகர்கள் புகழ், பாராட்டைப் பெற்று மகிழ்வர்.
* கலைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு விருது, பாராட்டு கிடைக்கலாம்.
* விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். பாசிப்பயறு, நெல், பழ வகைகள் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.
* மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் வளர்ச்சியை எதிர்நோக்கலாம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
சுமாரான பலன்கள்
* நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
* அரசு பணியாளர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
* போலீஸ், ராணுவத்தினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.
* விவசாயிகள் புதிய சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம்
கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது.
நல்ல நாள்: செப். 18,19,20,21,24,25,29,30, அக்.6,7,8,9,10,15,16
கவன நாள்: அக்டோபர் 11,12 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,7 நிறம்: சிவப்பு, பச்சை.
பரிகாரம்:
* சதுர்த்தி திதியன்று விநாயகர் வழிபாடு
* சனிக்கிழமைகளில் அனுமனுக்கு தீபம்
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி தரிசனம்