பதிவு செய்த நாள்
16
செப்
2020
08:09
சுக்கிரன் செப்.29ல் சாதகமான இடத்துக்கு மாறுகிறார். சனி மாதம் முழுவதும் நன்மை தருவார். அவர் செயலில் அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அளிக்க இருக்கிறார்.
செப்.28க்கு பிறகு பண வரவு கூடும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அண்டை வீட்டார் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். புதனால் செப். 21 – அக். 7 வரை சில பிரச்னைக்கு ஆளாகலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
பெண்கள் செல்வாக்குடன் திகழ்வர். செப்.28க்கு பிறகு சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். உங்களால் குடும்பம் சிறக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தைக் காண்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகலாம். வீண் செலவை குறைக்கவும். வெளியுலகில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. அண்டை வீட்டாரால் பிரச்னையை சந்திக்கலாம். இருப்பினும் குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் எதையும் முறியடித்து வெற்றிக்கு வழி காண்பீர்கள்.
உடல் நலத்தில் சிறிது அக்கறை காட்டவேண்டியதிருக்கும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு லாபம் படிப்படியாக அதிகரிக்கும். செப்.28க்கு பிறகு பங்கு வர்த்தகம் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
* வியாபாரிகள் சனிபகவான் மூலம் அமோக ஆதாயம் கிடைக்கப் பெறுவர்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். பதவி உயர்வுக்கு தடையிருக்காது.
* ஐ.டி. துறையினர் செப். 28க்கு பிறகு எதிர்பாராத நன்மை கிடைக்கப் பெறுவர். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
* மருத்துவர்கள் திறமைக்கு ஏற்ற வருமானம் கிடைக்கப் பெறுவர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும்.
* வக்கீல்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்
* ஆசிரியர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது.
* பொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் அந்தஸ்துடன் செயல்படுவர்.
* கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்த தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் செப். 28க்கு பிறகு மறையும். அதன் பிறகு நற்பலனை காணலாம். குடும்ப பெரியோரின் ஆதரவால் சிலர் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
* விவசாயிகள் எள், உளுந்து, கொள்ளு சோளம், மானாவாரி பயிர்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்கப் பெறுவர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு பகைவரால் அவ்வப்போது இடையூறு வரலாம். எனவே அவர்கள் பக்கம் ஒரு கண் இருப்பது நல்லது. அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்னை குறுக்கிடலாம். எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும்.
* தரகு, கமிஷன் தொழிலில் எதிரியால் தொல்லை வரலாம். சூரியனால் விரயம் ஏற்படலாம்.
* அரசு பணியாளர்கள் வீண்விவாதங்களை தவிர்க்கவும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. பண விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.
* தனியார் துறை பணியாளர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சூரியனால் இடமாற்றம் வர வாய்ப்புண்டு.
* போலீஸ், ராணுவத்தினர் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலும் பளுவும் அதிகரிக்கும்.
* அரசியல்வாதிகள் பிரதிபலன் கருதாமல் பாடுபடவேண்டும். மனக்குழப்பம் ஏற்படலாம். புகழ், பாராட்டு தட்டி பறிக்கப்படலாம்.
* விவசாயிகள் கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் பெற முடியாது. புதிய சொத்து வாங்க பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம்.
* மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும். ஆசிரியர்கள் அறிவுரையைத் தவறாமல் பின்பற்றவும்.
நல்ல நாள்: செப். 17,20,21,24,25 அக். 1,2,3,4,5,11,12,13,14
கவனநாள்: அக். 6,7 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: கருப்பு, வெள்ளை.
பரிகாரம்:
* ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு
* வெள்ளிக்கிழமை நாக தேவதை தரிசனம்
* சுவாதியன்று லட்சுமி நரசிம்மருக்கு விளக்கு