பதிவு செய்த நாள்
16
செப்
2020
08:09
இந்த மாதம் கேது தொடர்ந்து நன்மை தருவார். சுக்கிரன் செப்.28க்கு பிறகும், புதன் செப்.21 - அக்.7 வரையும் நற்பலன் தருவர். தடைகள் பல குறுக்கிட்டாலும் உங்களின் தீவிர முயற்சியால் எடுத்த முயற்சியை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணப் புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.
குடும்பத்தில் கேது உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கி வருகிறார். குறிப்பாக முயற்சிகளில் வெற்றியை தருவார். செப்.28க்கு பிறகு சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வசதி வாய்ப்பு பெருகும். பெண்களால் நற்சுகம் உண்டாகும். பொருளாதார வளம் கூடும். செப்.21 – அக்.7 வரை சகோதர வழியில் ஆதரவு இருக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும்.
சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சமூக மதிப்பு சுமாராக இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பெண்கள் குதுாகலமாக இருப்பர். தோழிகள் உறுதுணையாக செயல்படுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிகள் மூலம் உதவி கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். செப்.20க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலன் பெறுவர். செவ்வாயால் உடல்நலம் பாதிக்கலாம். வயிறு பிரச்னை வரும். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் தொழில் ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வர். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து செப்.20க்கு பிறகு விடுபடுவர். அதன் பின்னர் உங்கள் முன்னேற்றத்துக்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில்கள் சிறப்படையும். பங்கு வர்த்தகம் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.
* வியாபாரம் வளர்ச்சி முகமாக அமையும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் செப்.28க்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்
* தரகு, கமிஷன் தொழிலில் எதிர்பாராத பணவரவு இருக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உருவாகும்.
* தனியார் துறை பணியாளர்கள் செப்.21 – அக்.7 வரை மேன்மை காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம்.
* ஐ.டி., துறையினருக்கு செப்.20க்கு பிறகு பதவி உயர்வு தானாக வந்து சேரும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
* வக்கீல்களுக்கு செப்.21 – அக்.7 வரை சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்
* போலீஸ், ராணுவத்தினருக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும்.
* மருத்துவர்களுக்கு செப்.28க்கு பிறகு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
* பொதுநல சேவகர்கள் செப்.28க்கு பிறகு உங்களின் திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்
* கலைஞர்களுக்கு செப்.28க்கு பிறகு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
* விவசாயிகள் பாசிப்பயறு, நெல், உளுந்து, கொள்ளு, சோளம், தக்காளி, பழவகைகள் மூலம் வருமானம் கிடைக்கும்.
செப்.20 க்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணைத்தொழிலில் வளர்ச்சி காண்பர்.
சுமாரான பலன்கள்
* அரசு பணியாளர்கள் சிலர் இடமாற்றத்தை சந்திப்பர். வீண் விவாதங்களை தவிர்க்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை.
* தனியார் துறை பணியாளர்கள் சிலர் செப்.20 வரையும், அக்.7க்கு பிறகும் பொல்லாப்பை சந்திப்பர். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.
* மருத்துவர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
* ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. சிலருக்கு ஒரு பிடிப்பு இல்லாத நிலை உருவாகலாம்.
* அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
* விவசாயிகள் புதிய சொத்து வாங்க சில மாதம் காத்திருக்க வேண்டும். வழக்கு விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம்.
* மாணவர்கள் செப். 20 வரை சிரத்தை எடுத்தே படிக்க வேண்டியதிருக்கும். நட்பு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. யாரிடமும் அனாவசியமாக பழக வேண்டாம்.
நல்ல நாள்: செப்.20,21,22,23,26,27,28, அக்.1,2,8,9,10,11,12
கவன நாள்: செப்.17 அக். 13,14 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: சிவப்பு, பச்சை.
பரிகாரம்:
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு
* செவ்வாய்க்கிழமை முருகனுக்கு நெய்தீபம்
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் தரிசனம்