பதிவு செய்த நாள்
22
செப்
2020
09:09
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, திருப்பதி எடுத்துச் செல்லப்பட்டது.
திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளன்று, ஏழுமலையானுக்கு சாற்றுவதற்காக, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் கொண்டு செல்லும் நிகழ்ச்சி, ஆண்டாள் கோவிலில் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, மதியம், 12:00 மணிக்கு, வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு மாலை, கிளி, பட்டு வஸ்திரம், மங்கல பொருட்கள் சாற்றி, வாசுதேவ பட்டர் சிறப்பு பூஜைகளை செய்தார்.பின், ஸ்தானிகம் ரமேஷ் தலைமையில், கோவில் பிரகாரம், வீதிகளில் சுற்றி வந்து, காரில் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.