Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : குரு பெயர்ச்சி 2020 - 2021 விருச்சிகம் : குரு பெயர்ச்சி 2020 - 2021 விருச்சிகம் : குரு பெயர்ச்சி 2020 - 2021
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை)
துலாம் : குரு பெயர்ச்சி 2020 - 2021
எழுத்தின் அளவு:
துலாம் :  குரு பெயர்ச்சி 2020 - 2021

பதிவு செய்த நாள்

31 அக்
2020
07:10

சித்திரை 3, 4ம் பாதம் : ஆன்மிக நாட்டம் கூடும்

பொது : கடந்த ஒரு வருட காலமாக இருந்து வந்த குரு பகவானின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் முடிவிற்கு வந்து நான்காம் இடமாகிய சுகஸ்தானத்தில் குருபகவானின் அமர்வைப் பெற உள்ளீர்கள். இதனால் வாழ்வியல் நிலையில் நிம்மதியான சுகத்தினை உணர்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நன்கு ஆலோசித்து செயல்படும் திறன் ஓங்கும். அதே நேரத்தில் அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். சுபகாரியங்களை நடத்துவதில் அதிக அலைச்சலை சந்திப்பீர்கள். செவ்வாயை நட்சத்திர அதிபதி ஆகவும் சுக்ரனை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஓரளவிற்கு நன்மையைத் தரும் வகையில் அமைந்துள்ளது.


நிதி : ராகு,கேதுவின் அமர்வு நிலையால் அதிக விரயத்தினைக் காணும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நிதிநிலையில் சற்று நிம்மதியைத் தரும். ராகுவின் மீது விழும் குரு பார்வையால் அநாவசிய செலவுகள் குறையும். உங்களைச் சார்ந்து இருப்பவர்களின் பெயரில் சொத்துக்கள் சேரும். மனைவி, குழந்தைகள் பெயரில் வீடு, மனை, நிலம் போன்ற அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்து வைப்பது நல்லது.

குடும்பம் : குடும்பத்தில் நிலவி வரும் சலசலப்பு லேசான மன வருத்தத்தைத் தரும், குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற அரும்பாடுபட்டு உழைத்து வருவீர்கள். பேரப்பிள்ளைகளால் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறக் காண்பீர்கள். கோபத்தில் பேசும் வார்த்தைகளால் குடும்பத்தினருடன் மனக்கசப்பு உண்டாகி வருகிறது என்பதைப் புரிந்துகொண்டு வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடித்து வாருங்கள்.

கல்வி : குருவின் சாதகமான நிலையால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும். நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வியில் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவினில் இடம் கிடைக்கக் காண்பார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் இன்ஜினியரிங், இயற்பியல், உடற்கல்வி, பிஸியோதெரபி, பயோ டெக்னாலஜி ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்.

பெண்கள் : குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தக்கவைப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். விரும்பிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிவிடுவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். கணவரின் பணிகளுக்கு உங்களது ஆலோசனைகள் அவ்வப்போது தேவைப்படும். குழப்பம் தரும் விவகாரங்களில் முக்கியமான முடிவுகளை செவ்வாய்கிழமையில் எடுப்பது நல்லது. ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தான, தர்மம் என்ற பெயரால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. கவனமாக இருக்கவும்.
உடல்நிலை : நீண்டநாள் தொந்தரவுகள் முடிவிற்கு வரும். எண்ணெயினால் ஆன தின்பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது. அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுவதால் உடல்நிலை பாதிக்கப்படலாம். மருந்தினால் அலர்ஜி உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் உங்கள் உடல்நிலையைப் பொறுத்த வரை சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை நாடுவது நன்மை தரும். புரோட்டீன் சத்து நிறைந்த உணவுகள் ஆரோக்யத்தை சீராக வைத்திருக்கும்.

தொழில் : ஜீவனஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் தொழில் ரீதியாக ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிட்டும். தொழில் முறையில் வெளிநாட்டு தொடர்பு உடையவர்கள், டிராவல்ஸ் நடத்துபவர்கள், பழைய பொருட்களை வாங்கி விற்பவர்கள் ஆகியோர் நன்மை காண்பார்கள். கட்டிடக்கலை, சமையல் கலை ஆகியவை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். உணவுப் பண்ட வியாபாரம் செழிக்கும். ஓய்வில்லாமல் உழைப்பதற்கான பலனை குருபகவான் நிச்சயம் தருவார்.

பரிகாரம் : வாராஹி அம்மனை வழிபட்டு வாருங்கள்.

சுவாதி : சுபச்செலவுகள் அதிகரிக்கும்

பொது : சுக ஸ்தானத்தில் குருவின் வரவினால் சற்று சௌகரியமாக உணர்வீர்கள். உங்கள் கருத்துக்கள் சுற்றியுள்ளோர் மனதினில் தாக்கத்தினை உண்டாக்கும். பேச்சினில் தடுமாற்றத்தை உணர நேரிடும். முக்கியமான விவாதங்களுக்குச் செல்வதற்கு முன்னால் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் நட்சத்திர அதிபதி ராகு எட்டில் சஞ்சரிப்பதால் சில நேரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கக் கண்டு வருத்தம் கொள்வீர்கள். நிதானத்தை இழக்காமல் பொறுமையாக கவனித்துப் பாருங்கள். ராகுவின் மீது குருவின் பார்வை விழுவதால் நீங்கள் நினைப்பதற்கு மாறாக நடப்பது போல் தோன்றினாலும் இறுதியில் நிச்சயமாக வெற்றி காண்பீர்கள்.

நிதி : வரவினை விட செலவுகள் கூடுதலாக அமைந்திருக்கிறது. என்றாலும் விரய ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் சுபசெலவுகளாக அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். ஜனன ஜாதகத்தில் குரு, சுக்ரன், சூரியன் வலுவாக இருக்கப் பிறந்தவர்கள் தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றில் முதலீடு செய்ய இயலும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்கள் அதிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.
குடும்பம் : குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற கூடுதலாக உழைத்து வருவீர்கள். அதே நேரத்தில் அவர்கள் தரப்பிலிருந்து பிரதிபலன் எதிர்பார்க்க இயலாது. உறவினர்கள் வழியில் சங்கடத்தினை சந்திக்க நேரிடும். நெருக்கமானவர்கள் கூட விலகிச் செல்லும் வாய்ப்பு உண்டு. முன்னோர்கள் பற்றிய சிந்தனை கூடும். பேரன்கள், பேத்திகளின் நடவடிக்கைகளில் முன்னேர்களின் சாயலைக் கண்டு பெருமை கொள்வீர்கள்.

கல்வி : மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொள்வதில் சற்று சிரமம் காண்பார்கள், தேர்வு நேரத்தில் கவனக்குறைவால் ஒரு சில பிரச்னைகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதால் கூடுதல் எச்சரிக்கை தேவை. வித்யா ஸ்தானத்தில் குரு நீசம் பெறுவதால் ஆசிரியரின் ஆதரவைப் பெற போராட வேண்டியிருக்கும். உயர்கல்வி மாணவர்கள் சற்று தடுமாற்றமான சூழலை உணர்ந்து வருவார்கள். மெரைன் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்ஸ் துறை மாணவர்கள் ஏற்றம் காண்பர்.

பெண்கள் : முன்பின் தெரியாத நபர்களிடம் பேசும்போது சிறப்பு கவனம் தேவை. வீண்வம்பு விவகாரங்கள் வந்து சேரலாம் என்பதால் அதிகம் பேசாமல் அமைதி காத்து வருவது நல்லது. சமூக வலை தளங்களை உபயோகப்படுத்தும்போது எச்சரிக்கையுடன் இருந்து வாருங்கள். நண்பர்களாக நீங்கள் எண்ணி இருந்தவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படும் வாய்ப்பு உண்டு.
உடல்நிலை : உடலில் உங்களையும் அறியாமல் சோம்பல்தன்மை குடிகொள்ளும். எப்பொழுதும் போல் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்தால் மட்டுமே ஆரோக்யத்தைக் காக்க இயலும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகப்படியான டென்ஷன் என்பதும் உங்கள் உடல்நலத்தை சோதனைக்கு உள்ளாக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். பொழுதுபோக்கு அம்சங்கள் உங்கள் மனநிலையையும் உடல்நிலையையும் சீராக வைத்திருக்க உதவும்.

தொழில் : ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் குருவின் பார்வை உத்யோகத்தில் உங்களை சிறப்பாக செயல்படவைக்கும். பொறுப்புகளை அதிகளவில் சுமந்து வருவீர்கள். எத்தனை சிறப்பாக செயல்பட்டாலும் உங்களுக்கு உரிய அங்கீகாரம் என்பது பெயரளவில்தான் இருந்து வருமே தவிர பெருத்த ஆதாயம் காண இயலாது. வியாபாரிகள், சுயதொழில் செய்வோர் அதிகளவிலான ட்ரான்ஸாக்ஷன்ஸ் செய்வது போல் தோன்றினாலும் லாபம் குறைவதாக உணர்வீர்கள். தொழிலதிபர்கள் கீழ்நிலைப் பணியாளர்களால் உண்டாகும் பிரச்னைகளை சமாளிப்பதில் சற்று சிரமம் கண்டு வருவார்கள். அந்நியம் தேசம் சார்ந்த முதலீடுகளில் கூடுதல் எச்சரிக்கை தேவை. விவசாயிகள் சாதகமான சூழலைக் கண்டு வருவார்கள்.
பரிகாரம் : அமாவாசை நாளில் அன்னதானம்.

விசாகம் 1, 2, 3ம் பாதம் : யாகாவாராயினும் நாகாக்க

பொது : குருவின் நான்காம் இடத்து அமர்வு நிலை உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. நட்சத்திர அதிபதி ஆக குருவினையும் ராசிஅதிபதி ஆக சுக்ரனையும் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த நேரத்தில் ஆடை, ஆபரணங்கள் சேரும். சுக சௌகர்யங்கள் நிறைந்திருக்கும். உங்கள் உதவியை நாடி வருபவர்களின் எண்ணிக்கை உயர்வடையும். கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகள் மீது அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். அவ்வப்போது எதிர்பாராத பிரயாணங்களுக்கு ஆளாவீர்கள். மற்றவர்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி நீங்கள் சொல்ல வேண்டிய கருத்துக்களை ஆணித்தரமாக வெளிப்படுத்திவிடுவீர்கள்.

நிதி : நிதிநிலையில் ஏற்ற இறக்கமான சூழலைக் காண்பீர்கள். ராகு,கேதுவின் சாதகமற்ற சஞ்சாரத்தால் செலவுகள் அதிகமாகும். இருந்தாலும் குருவின் நான்காம் வீட்டு அமர்வு என்பது அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்யும் ஆர்வத்தைத் துாண்டும். புதிதாக வீடு, மனை வாங்க முனைபவர்கள் மூலப்பத்திரம், வில்லங்கம்  ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்து வேண்டியது அவசியம். இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்பதால் நீங்களே நேரடியாக விசாரித்துத் தெரிந்துகொள்வது நல்லது. வங்கி டெப்பாசிட், இன்ஷ்யூரன்ஸ் போன்ற விஷயங்களில் முதலீடு செய்வதே உங்களுக்கு பாதுகாப்பானதாக அமையும்.

குடும்பம் : குடும்ப உறுப்பினர்களுடன் அவ்வப்போது லேசான கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பிள்ளைகளின் விருப்பத்திற்காக கூடுதலாக செலவழித்து வருவீர்கள். அவர்களது செயல்பாடுகள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைந்தாலும் அவர்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருவீர்கள். நெருங்கிய உறவினர் ஒருவர் தனது வீட்டில் நடக்க உள்ள சுபநிகழ்விற்காக உங்களிடம் உதவி கேட்டு வரக்கூடும். உடன்பிறந்தோருடன் இணைந்து பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர்கள்.
கல்வி : மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். போட்டி என்று வரும்போது முன்னிலை பெறுவதில் தடையினை சந்திப்பீர்கள். இருந்தாலும் மனம் தளராமல் முடிந்தவரை முயற்சிப்பது நல்லது. ஒரு சிலருக்கு கடைசி நேரத்தில் வாய்ப்புகள் கைகூடி வரக்கூடும். தாவரவியல், கேட்டரிங் டெக்னாலஜி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், நர்சிங் சார்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள் : யாகாவாராயினும் நாகாக்க என்பதை நினைவில் கொள்ளவும். பேசும்போது அதிக எச்சரிக்கை தேவை. உங்கள் வார்த்தைகள் தவறாகப் பொருள் காணப்பட்டு அதனால் பிரச்னைகள் உருவாகலாம். ஒரு சிலர் உங்களைத் துாண்டிவிட்டு பேசவைத்து வேடிக்கை பார்ப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். கணவருடன் இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள்.

உடல்நிலை : உடல்நிலையில் நீண்ட நாட்களாக இருந்து வரும் தொந்தரவுகள் முடிவிற்கு வரக் காண்பீர்கள். கண் நோய், பல்வலி, மூட்டுவலி, நரம்பியில் சார்ந்த பிரச்னைகளை அலட்சியப்படுத்தாது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. வாயுத் தொந்தரவினால் அவ்வப்போது உடலில் தசைப்பிடிப்பினை உணர்வீர்கள்.
தொழில் : உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண்பதற்காக அடுத்தவர்களின் பணியையும் சேர்த்துச் செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாவீர்கள். கீழ்நிலைப் பணியாளர்களிடம் எச்சரிக்கை தேவை. அலுவல் கோப்புகளைப் பராமரிப்பதில் நேரடி கவனம் அவசியம் தேவை. சுயதொழில் செய்வோர் ஓய்வின்றி செயல்பட நேரிடும். எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். உணவுப் பண்ட வியாபாரம், காய்கறி, பழங்கள், குடிநீர், ஜுஸ், ஐஸ்கிரீம் வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்யும் தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தை பலப்படுத்திக்கொள்ள காலநேரம் சாதகமாக அமையும்.

பரிகாரம் : அன்னபூரணியை வணங்கி வரவும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »
temple news
அசுவினி: வருமானம் அதிகரிக்கும்செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு ... மேலும்
 
temple news
கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar