Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கழுகுமலை தூய லூர்தன்னை தேவாலய ... காரிமங்கலம் மஹா சக்தி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2012
10:05

திண்டிவனம்:திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பழமையான கனகவல்லி நாயிகா சமேத லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதற்காக கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது. கடந்த 23ம் தேதி யாகசாலை நிர்மாணம் செய்து மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 24ம் தேதி காலை 8 மணிக்கு சாற்றுமறை, அஷ்டபந்தனம் சமர்பித்தல் நடந்தது. மாலை 3 மணிக்கு, மஹாசாந்தி கும்ப திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு நித்ய ஹோமம், யாகசாலை பூஜை நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம், யாகசாலை புண்யாஹவாசனம் ஆகிய பூஜைகள் நடந்தது. காலை 8 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகளும், மஹா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது. பின் யாக சாலையிலிருந்து கும்ப கலசங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து, ராஜகோபுரம், மூலவர் லட்சுமி நரசிம்ம சுவாமி விமானம், கனகவல்லி தாயார், ஆண்டாள் நாச்சியார், கருடாழ்வார், ஆஞ்சநேய மூர்த்தி, சொர்க்க வாசல் மண்டபத்திற்கு கலசங்களை சுமந்து வந்தனர்.

காலை 9.15 மணிக்கு, ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து சன்னதி களிலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேம் நடந்தது. தொடர்ந்து மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகளுடன் தீபாராதனை நடந்தது.விழாவில் அமைச்சர் சண்முகத் தின் சகோதரர் ராதாகிருஷ்ணன், அரிதாஸ் எம்.எல்.ஏ., நகர மன்ற சேர்மன் வெங்கடேசன், ராம் டெக்ஸ் தியாகராஜன், வெங்கடேசன், பி.ஆர்.எஸ்., ரங்கமன்னார், முன்னாள் பேரவை மாவட்ட செயலர் முரளி, நகர மன்ற துணை சேர்மன் முகமது ஷெரீப், நியூ பாண்டியன் மெட்டல் சுரேஷ், அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி, தக்கார் சிவாகரன், செயல் அலுவலர் முத்துலட்சுமி, ராம்லால் ரமேஷ், வழக்கறிஞர் பத்மநாபன், கவுன்சிலர் விஜயகுமார் மற்றும் பக்தர்கள் திரளாக வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar