Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ... மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூன்று கோவில்களில் தீ மிதி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2012
11:05

திருத்தணி:மூன்று அம்மன் கோவில்களில் நடந்த தீ மிதி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.திருத்தணி நகராட்சி, 20 வது வார்டு மேல்திருத்தணியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா, கடந்த, 10ம் தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த மஹோற்சவ விழா துவங்கியது. தினசரி காலை 10 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சந்தானக் காப்பு, சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மதியம் மகா பாரத சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு, அம்மன் திருவீதியுலாவும், இரவு 10 மணிக்கு மகா பாரத நாடகமும் நடந்தன.நேற்று முன்தினம், தீ மிதி திருவிழா முன்னிட்டு, காலை 8.30 மணிக்கு துரியோதனன் படுகளம் நடந்தது. காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து மூலவர் அம்மனுக்கு படைத்து வழிப் பட்டனர். மாலை 6 மணிக்கு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீ மிதித்தனர். தொடர்ந்து வாணவேடிக்கையும், இரவு பக்தி கச்சேரியும் நடந்தன. இதில்,முன்னாள் எம்.எல்.ஏ., அரி, நகராட்சி தலைவர் சவுந்தர்ராஜன், கவுன்சிலர்கள் உட்பட, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல், திருத்தணி அடுத்த, குடிகுண்டா, ஆர்.கே. பேட்டை அடுத்த, விளாக்கானம்பூடி புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள திரவுபதி அம்மன் கோவில்களில் தீ மிதி திருவிழா நடந்தது. இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீ மிதித்தனர். திருத்தணி ஏ.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, அந்தந்த பகுதி பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்; மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் சஷ்டி மற்றும் கிருத்திகை ஒட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவ வைபவத்தையொட்டி மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆவணி ... மேலும்
 
temple news
திருப்பதி; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ளிக்கிழமை திருமலை திருப்பதி கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar