திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீஐயப்பன் கோவில் மண்டல பூஜை விழாவை தொடர்ந்து, லட்சார்ச்சனை நிகழ்ச்சி நேற்று நிறைவு பெற்றது.திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில், 61ம் ஆண்டு மண்டல பூஜை விழா, விமரிசையாக நடந்தது. பறையெடுப்பு, கணபதி ேஹாமம், சுவாமி ஆறாட்டு உற்சவம் என, பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.மண்டல பூஜைவிழாவின் ஒரு பகுதியாக, திருவிளக்கு பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான, ஐயப்ப சுவாமி லட்சார்ச்சனை நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கி, நேற்று மாலை நிறைவு பெற்றது. 3 டன் எடையுள்ள பூக்களில், ஐயப்ப சுவாமிக்கு அர்ச்சனை செய்து, அபிேஷகம் செய்யப்பட்டது.