பதிவு செய்த நாள்
02
ஜன
2021
10:01
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், ஆண்டுதோறும் நடக்கும் குருபூஜை விழா, கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஜன., மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை இவ்விழா நடத்தப்படும். அதிகாலை, 5.00 மணிக்கு பஜனையுடன் தொடங்கி, கல்விப் பொருட்காட்சி, கலைநிகழ்ச்சி, அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவுகள் என இரவு, 9.00 மணிக்கு கர்நாடக சங்கீத இசைநிகழ்ச்சியுடன் நிறைவு பெறும்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வித்யாலய கல்வி நிறுவனங்களில் படித்த முன்னாள் மாணவர்கள், ராமகிருஷ்ண இயக்கத் துறவிகள், ராமகிருஷ்ண இயக்க பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்பது வழக்கம்.நாளை நடைபெற வேண்டிய இவ்விழா, கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள், பொதுமக்கள் யாரும், வித்யாலயத்துக்கு வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.