Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரியூர் குண்டம் திருவிழா மறு ... தாமலில் ஊர்வலம் வந்த மந்தைவெளி மாரியம்மன் தாமலில் ஊர்வலம் வந்த மந்தைவெளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல்
எழுத்தின் அளவு:
மதுரையில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல்

பதிவு செய்த நாள்

18 ஜன
2021
10:01

 மதுரை : மதுரை சட்ட கல்லுாரி மற்றும் மாகாளிபட்டி கிருதுமால் நதி அருகே 400 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல்லை மதுரை தொல்லியல் ஆய்வு சங்க கோயில் கட்டடக்கலை, சிற்பத் துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் சசிகலா, வரலாற்று ஆய்வாளர் அறிவுச்செல்வம் கண்டுபிடித்தனர்

தேவி கூறியதாவது: ஒரு பலகை கல்லில் ஆண், பெண் உருவம் செதுக்கப்பட்டுள்ளன. அரசனை போல் உள்ள ஆண் சிற்பம் கணுக்கால் வரை மடிப்பு ஆடை உடுத்தி, குறுவாள் சொருகியுள்ளது. இடது கையில் முத்திரை, வலது கையில் மலர் பிடித்து சாந்தமாக உள்ளது. செவிகளில் பத்ரகுண்டலங்கள், கழுத்தில் சரப்பளி, கைகளில் கேயூரம், தோள்வளை, கைவளை அணிகலன்கள் தேய்ந்துள்ளன. தலைவனின் வலது புறம் பெண்மையின் நளினத்துடன் தலைவி சிலை உள்ளது. தலைவனோடு உயிர் நீத்த சதிப்பெண்ணான தலைவி சிற்பமாக மாறி வழிபடலாம். மக்களை காக்க வீர மரணமடைந்த வீரர்களை காவல் தெய்வம் கருப்பசாமிகளாக வழிபடுவது நம் மரபு. பலகை கல்லில் உள்ள தலைவன் சமூக நலனுக்காக உயிர் நீத்த போது தலைவியும் உடன் இறந்ததால் சதிக்கல்லாக மாறி வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது. பெண் தெய்வ வழிபாட்டில் கன்னி, பத்தினி, பழையோள் வழிபாட்டு முறைகளில் பத்தினி வழிபாட்டு வகையை சேர்ந்த சதிக்கற்களை மக்கள் வழிபடுவர்.அந்த வகையில் இந்நடுகல் சதிக்கல்லாகவும் நிற்கிறது. மாகாளிபட்டியில் ஆண் உருவம் செதுக்கிய நடுகல்லையும் மக்கள் வழிபடுகிறார்கள், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar