Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாலோலனுடன் அமிர்தவல்லி தாயார் ... ஜீவகாருண்ய சேவையில் கிடைக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டத்துக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2021
05:01

 திருப்பூர் : ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து டிச., வரையில், எவ்வித விழாக்களும் நடக்கவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், அந்தந்த பகுதி வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்புதலுடன், தைப்பூச தேர்த்திருவிழா கொண்டாட தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், காங்கயம் - சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூன்று நாட்கள் நடக்கும் தேரோட்டம், இந்தாண்டு ஒரு நாள் மட்டும் நடக்கிறது. கொடியேற்றம், தினசரி வாகன காட்சி, திருவீதியுலா நிகழ்வுகளுடன், 28ம் தேதி ஒரு நாள் மட்டும் தேரோட்டம் நடக்க உள்ளது.l ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. தினமும், காலை, மாலை வழிபாடுகள் நடந்து வரும். வரும், 28ம் தேதி அடிவாரத்தில் தேரோட்டமும், 31ம் தேதி மலை மீதும் தேரோட்டம் நடத்த, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவிலில், இன்று கிராமசாந்தியும், நாளை தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றமும் நடக்கிறது. மயில்வாகன காட்சி, சுவாமி கிரிவல காட்சிகள் தினமும் நடக்கும்; 27 ம் தேதி திருக்கல்யாணமும், 28 ம் தேதி மாலை, தேரோட்டமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து, பரிவேட்டை, குதிரைவாகன பவனி, மகாதரிசனம் நடைபெறுகிறது. அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிேஷக திருப்பணி நடந்து வருகிறது. சுவாமி பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், இந்தாண்டு தைப்பூச தேரோட்டம் நடக்காது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar