Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளிங்கிரி மலையேற்றம் துவக்கம் மண்ணில் புதைந்த மண்டப படிகள் வெளிக்கொணர்வு மண்ணில் புதைந்த மண்டப படிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?

பதிவு செய்த நாள்

02 மார்
2021
11:03

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி நடப்பதால், இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுமா என, பக்தர்கள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது.

கோவில்களில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, 2009ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால், 2018 பிப்., 2ல் நடந்த தீ விபத்தில் சேதமடைந்த, வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணி நடப்பதால், இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இம்மண்டப சீரமைப்பு பணி, 2023ல் தான் முடியும். அதுவரை கும்பாபிஷேகம் நடத்துவது சாத்தியமில்லை. வீரவசந்தராயர் மண்டபத்தை மட்டும் தவிர்த்து நடத்தவும் முடியாது. பக்தர்களும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் கும்பாபிஷேகம் என்பது, கோவில் முழுதும் திருப்பணிகள் முழுமையாக முடிந்த பிறகே நடத்தப்பட வேண்டும் என்பது, ஆகம விதி. நிர்வாகம் தரப்பில் கேட்ட போது, ஏற்கனவே, 2021 - 22ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகள் தாமதமாகும் பட்சத்தில், தக்கார், பட்டர்கள், அதிகாரிகளுடன் ஆலோசித்து, எப்போது நடத்துவது என முடிவு செய்யப்படும் என்றனர்.

36 கடைகளை திறக்க அனுமதி: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கடைக்காரர்கள் சங்க தலைவர் ராஜுநாகுலு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சங்க உறுப்பினர்கள் குங்குமம், மஞ்சள், பூ, பூஜை பொருட்கள், செயற்கை நகைகள், புத்தகங்கள் விற்பனை செய்ய, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கொரோனா ஊரடங்கால், 2020 மார்ச் முதல் கடைகள் மூடப்பட்டன.

எங்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. ஊரடங்கு தளர்வால், மாநிலத்தில் பிற கோவில்களில் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடைகளை திறக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார்.நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார். கோவில் தரப்பில், 72 கடைகளில், 36 கடைகளை நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதிக்கத் தயார். மற்ற, 32 கடைகள் சிற்பங்களின் பாதுகாப்பிற்கு இடையூறாக இருப்பதால், அவற்றை திறக்க அனுமதிக்க வாய்ப்பில்லை என, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் 519வது ஆண்டு ஆனி தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் மாதந்தோறும் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் உற்சவர் பிரதிஷ்டை அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar