Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழனி மலைக்கோயில் படிப்பாதையில் ... தூணில் அருள்பாலிக்கும் சுயம்பு சக்கரத்தாழ்வார் தூணில் அருள்பாலிக்கும் சுயம்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2021
05:04

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நடந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான காளைகள் சீறிப் பாய்ந்தன. இங்கு கிராமத்தார்கள் சார்பில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இளவட்ட மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். கடைவீதி, சேவுகப்பெருமாள் கோயில் திடல் என நடத்தப்பட்டு வந்த இம்மஞ்சுவிரட்டு இம்முறை சேவுகப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 150 ஏக்கர் கோயில் காட்டில் நடந்தது. ஒரு மாத காலமாக மஞ்சுவிரட்டு திடல் சுத்தம் செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடந்தன். மார்ச் 26-ஆம் தேதி நடத்தப்பட இருந்த மஞ்சுவிரட்டு சட்டசபை தேர்தல் காரணமாக ஏப். 7 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு நடந்தது. காலை 9:30 மணிக்கு சிங்கம்புணரி கிராமத்தார்கள் சந்திவீரன் கூடத்தில் வழிபாடு நடத்தி அங்கிருந்து ஊர்வலமாக மஞ்சுவிரட்டு திடலுக்கு துணி எடுத்து வந்தனர். 10:30 மணிக்கு சேவுகப்பெருமாள் கோயில் மாடுகள் அவிழ்க்கப்பட்டு மஞ்சுவிரட்டு துவங்கியது. தொழு மாடுகளும் கட்டு மாடுகளும் அவிழ்க்கப்பட்டன. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.

ஏராளமான மாடுபிடி வீரர்களும் பார்வையாளர்களும் பங்கேற்றனர். மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டுகளின் போது வழக்கமாக நடக்கும் குறைபாடுகளை தவிர்க்கும் பொருட்டு விழா கமிட்டியினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதியோகி மற்றும் 63 தேர்களுடன் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு மாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 ஆண்டின் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar