Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழனி மலைக்கோயில் படிப்பாதையில் ... தூணில் அருள்பாலிக்கும் சுயம்பு சக்கரத்தாழ்வார் தூணில் அருள்பாலிக்கும் சுயம்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2021
05:04

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நடந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான காளைகள் சீறிப் பாய்ந்தன. இங்கு கிராமத்தார்கள் சார்பில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இளவட்ட மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். கடைவீதி, சேவுகப்பெருமாள் கோயில் திடல் என நடத்தப்பட்டு வந்த இம்மஞ்சுவிரட்டு இம்முறை சேவுகப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 150 ஏக்கர் கோயில் காட்டில் நடந்தது. ஒரு மாத காலமாக மஞ்சுவிரட்டு திடல் சுத்தம் செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடந்தன். மார்ச் 26-ஆம் தேதி நடத்தப்பட இருந்த மஞ்சுவிரட்டு சட்டசபை தேர்தல் காரணமாக ஏப். 7 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு நடந்தது. காலை 9:30 மணிக்கு சிங்கம்புணரி கிராமத்தார்கள் சந்திவீரன் கூடத்தில் வழிபாடு நடத்தி அங்கிருந்து ஊர்வலமாக மஞ்சுவிரட்டு திடலுக்கு துணி எடுத்து வந்தனர். 10:30 மணிக்கு சேவுகப்பெருமாள் கோயில் மாடுகள் அவிழ்க்கப்பட்டு மஞ்சுவிரட்டு துவங்கியது. தொழு மாடுகளும் கட்டு மாடுகளும் அவிழ்க்கப்பட்டன. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.

ஏராளமான மாடுபிடி வீரர்களும் பார்வையாளர்களும் பங்கேற்றனர். மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டுகளின் போது வழக்கமாக நடக்கும் குறைபாடுகளை தவிர்க்கும் பொருட்டு விழா கமிட்டியினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar