Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரை விஷு பூஜைகளுக்காக சபரிமலை ... வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
12ம் நூற்றாண்டு கால அய்யனார் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
12ம் நூற்றாண்டு கால அய்யனார் சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
01:04

அருப்புக்கோட்டை: நரிக்குடி அருகே இருஞ்சிறையில் வயல் வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ள பழமையான அய்யனார் கோயிலில் நடந்த கள ஆய்வில் 12ம் நாற்றாண்டு கால அய்யனார் சிலை கண்டெடுத்ததாக, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் செல்லபாண்டியன் , பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் ஸ்ரீதர் கள ஆய்வு செய்த நிலையில், செல்லபாண்டியன் கூறினார்.அவர்கள் மேலும் கூறியதாவது: இச்சிலை இடைக்கால பாண்டியர்களின் காலகட்டத்தை சேர்ந்ததாகும். இடைக்கால பாண்டியர்களின் காலம் கி.பி., 960 முதல் 1230 வரையாகும். சிலையின் தலையை கிரீடத்துடன் கூடிய அடர்த்தியான ஜடா பாரம் அலங்கரிக்கிறது. இரு காதுகளில் வட்ட வடிவ பத்ர குண்டலங்கள், முகம் வட்ட வடிவமாகவும், எடுப்பான நாசி, தடித்த உதடுகளை உடைய திருவாய் அகன்ற தோலுடன் காட்சியளிக்கிறது. கைகளின் மேல் புஜங்களில் உருளை வடிவுடைய தோல் வளைவுகள், முன்னங் கைகளில் கை வளைவுகளும் உள்ளன. மார்பில் அணிகலன்கள் , முப்புரி நுாலோடு, மார்பு சற்றே விரிந்து கம்பீரமாக காட்சியளிக்கிறார். வலது கரம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இடுப்பையும் இடது காலையும் இணைத்து யோக பட்டை காணப்படுகிறது. வலது காலை மடித்து, இடது காலை நீட்டியும் உட் குதியாசன கோலத்தில் அமர்ந்துள்ளார். இடைக்கால பாண்டியர்களின் இது போன்ற கலைப்படைப்புகள் காண்போரின் கண்களையும், கருத்துக்களையும் கவரும் விதத்தில் இருக்கும்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar