Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

துாய்மையாக இருங்கள் கண்டால் ஒதுங்குங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஏழைகளுக்கு உதவுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
10:04


விறகுவெட்டி ஒருவன் வறுமையில் வாடினாலும் பசி என வருவோருக்கு உணவு கொடுப்பான். ‘‘ நமக்கே சாப்பிட வழியைக் காணோம். இதில தர்மம் தேவையா’’ என மனைவி காலையில் திட்டினாள். வருத்தமுடன் விறகு வெட்ட சென்ற போது வழியில் சீடர்களுடன் வந்த நாயகத்தைக் கண்டான்.  தன் மனநிலையை எடுத்துச் சொன்னான்.
‘‘ நீ ஏழையாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள். நீ எப்போது பணக்காரனாக ஆகிறாயோ அப்போது இறப்பாய்’’ என்றார்.
அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய அவன், மறுநாள் விறகு வெட்டச் சென்றான். புதரின் மறைவில் பெட்டி ஒன்று கிடக்கக் கண்டான். அதில் தங்கம், வைரம், வைடூரியம் என ஆபரணங்கள் மின்னின.
நொடிப்பொழுதில் கோடீஸ்வரனாகி விட்டதை எண்ணி மகிழ்ந்தாலும், நாயகம் சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனாலும் செல்வத்தை இழக்க மனமில்லை. சட்டென யோசித்தவனாக நல்ல மனம் படைத்த தன் நண்பரின் வீட்டிற்கு சென்றான். நடந்தை எல்லாம் விவரித்த அவன், ‘‘நான் செல்வந்தனாக மாறினால் தானே இறப்பு வரும். இது மக்களுடையது என நினைத்து வறியவர்களுக்கே செலவு செய்வேன்’’ என தெரிவித்தான்.  
சுயநலம் இன்றி ஏழைகளுக்கு கொடுக்க ஏற்பாடு செய்தான். மக்கள் மத்தியில் புகழ் பெற்றான்.
நாயகம் எச்சரித்ததன் பொருள் அப்போது தான் அவனுக்கு புரிந்தது. ‘‘உங்களுக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என கடவுள் சோதிப்பார். எனவே ஏழைகளுக்கு கொடுங்கள். ஒருவர் தர்மம் செய்கிறார் என்றால் அதற்கு கடவுளின் கருணையே காரணம் என்ற உண்மையை உணருங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar