Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ... கோவில்களில் இருந்து அரசு மருத்துவமனைக்கு உணவு கோவில்களில் இருந்து அரசு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்ததேவி கற்சிலை
எழுத்தின் அளவு:
1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்ததேவி கற்சிலை

பதிவு செய்த நாள்

19 மே
2021
12:05

உத்திரமேரூர், : உத்திரமேரூர் அருகே, 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்ததேவி கற்சிலையை, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டெடுத்து உள்ளனர்.

இது குறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:உத்திரமேரூர் அடுத்த, வயலுார் கூட்டுச்சாலை, உள்ளம்பாக்கம் இருளர் குடியிருப்பில், கள ஆய்வு மேற்கொண்டபோது, 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால, மூதேவி எனப்படும் ஜேஷ்டாதேவி கற்சிலையை கண்டெடுத்தோம்.இச்சிலை ஒன்றரை அடி மட்டுமே வெளியில் தென்படுகிறது எஞ்சிய, இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதி, பூமிக்கடியில் காணப்படுகிறது. இதை, அப்பகுதிவாசிகள் எல்லை காத்தாள் என்கின்றனர்.

மூத்ததேவிக்கு தவ்வை, ஜேஷ்டாதேவி என்ற பெயர்களும் உண்டு. இவர் திருமாலின் மனைவியான லட்சுமி தேவியின் மூத்த சகோதரி. இவர் குறித்து சங்க இலக்கியம், திருவள்ளுவர் மற்றும் அவ்வையார் போன்ற பெரும் புலவர்களும் குறிப்பிட்டுள்ளனர். பல்லவர் காலத்தில் நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாக இருந்ததால், பல்லவர்கால சில கோவில்களில் இவருக்கு என, தனி சன்னிதியும் இருந்துள்ளது. பிற்கால சோழர் காலத்திலும், இந்த தெய்வம் வளமையின் அடையாளமாக போற்றப்பட்டது. பின், மூத்த தேவி என்பது, மூதேவி யாக மருவி பின், வழிபாடு இல்லாமல் போயுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த கால வரலாற்றை பறைசாற்றும் இந்த பழமையான இச்சிலையை, மண்ணில் இருந்து முழுமையாக எடுத்து பாதுகாக்க, தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான இன்று ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar