Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரசிம்மர் கோவிலில் கருடசேவை ... பழநி அருகே ஆற்றில் கிடந்த சுவாமி சிலைகள்! பழநி அருகே ஆற்றில் கிடந்த சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2012
11:06

அவினாசி: அவினாசி அருகே சேவூர் வாலீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, கொள்ளை முயற்சி நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், சேவூரில், அறம் வளர்த்த நாயகி உடனுறை, வாலீஸ்வரர் கோவில் உள்ளது. அர்ச்சகர் நடராஜன், நேற்று காலை, 6.00 மணிக்கு, கோவில் நடையை திறந்து, உள்ளே சென்றார். வாலீஸ்வரர், சுப்ரமணியர், நடராஜர், சிவகாமி அம்மன் சன்னிதிகளின், கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து, அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி, போலீசுக்கு தெரியப் படுத்தினார். சேவூர் போலீசார், கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். வாலீஸ்வரருக்கு அணிவிக்கப்பட்டு இருந்த, வெள்ளி நெற்றிப்பட்டை மட்டும், திருடு போயிருந்தது தெரிய வந்தது. சுப்ரமணியர் சன்னிதியில் இருந்த வேல் எடுக்கப்பட்டு, அருகில் உள்ள நடராஜர் சன்னதியின், பூட்டு மற்றும் கிரில் கதவு வளைக்கப்பட்டிருந்தது. திறக்க முடியாததால், திருடர்கள் திரும்பிச் சென்றது தெரிய வந்தது. கோவில் செயல் அலுவலர் விஸ்வநாதன், சேவூர் போலீசில் புகார் செய்தார். கோவையில் இருந்து தடயவியல் நிபுணர்கள், கோவிலுக்கு சென்று கை ரேகைகளை சேகரித்தனர். செயல் அலுவலர் கூறுகையில், 25 கிராம் எடையுள்ள வெள்ளி நெற்றிப்பட்டை மட்டும் திருடு போயுள்ளது. நடராஜர், சிவகாமி அம்மன் ஐம்பொன் சிலைகள் இருந்த சன்னிதியை, திறக்க முடியவில்லை. பாதுகாப்பு கருதி ஐம்பொன் சிலைகளை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வைக்க பரிசீலித்து வருகிறோம், என்றார். வாலீஸ்வரர் அறக்கட்டளை தலைவர் தேவராஜ் கூறுகையில், கோவில் பாதுகாப்புக்கு, செக்யூரிட்டியை நியமிக்க வேண்டும். போலீசார் இரவு ரோந்தின் போது, கோவில் அருகேயும் சென்றால், பாதுகாப்பாக இருக்கும். நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகளை, இங்கேயே, வைத்திருக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 2வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar