Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரசிம்மர் கோவிலில் கருடசேவை ... பழநி அருகே ஆற்றில் கிடந்த சுவாமி சிலைகள்! பழநி அருகே ஆற்றில் கிடந்த சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2012
11:06

அவினாசி: அவினாசி அருகே சேவூர் வாலீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, கொள்ளை முயற்சி நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், சேவூரில், அறம் வளர்த்த நாயகி உடனுறை, வாலீஸ்வரர் கோவில் உள்ளது. அர்ச்சகர் நடராஜன், நேற்று காலை, 6.00 மணிக்கு, கோவில் நடையை திறந்து, உள்ளே சென்றார். வாலீஸ்வரர், சுப்ரமணியர், நடராஜர், சிவகாமி அம்மன் சன்னிதிகளின், கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து, அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி, போலீசுக்கு தெரியப் படுத்தினார். சேவூர் போலீசார், கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். வாலீஸ்வரருக்கு அணிவிக்கப்பட்டு இருந்த, வெள்ளி நெற்றிப்பட்டை மட்டும், திருடு போயிருந்தது தெரிய வந்தது. சுப்ரமணியர் சன்னிதியில் இருந்த வேல் எடுக்கப்பட்டு, அருகில் உள்ள நடராஜர் சன்னதியின், பூட்டு மற்றும் கிரில் கதவு வளைக்கப்பட்டிருந்தது. திறக்க முடியாததால், திருடர்கள் திரும்பிச் சென்றது தெரிய வந்தது. கோவில் செயல் அலுவலர் விஸ்வநாதன், சேவூர் போலீசில் புகார் செய்தார். கோவையில் இருந்து தடயவியல் நிபுணர்கள், கோவிலுக்கு சென்று கை ரேகைகளை சேகரித்தனர். செயல் அலுவலர் கூறுகையில், 25 கிராம் எடையுள்ள வெள்ளி நெற்றிப்பட்டை மட்டும் திருடு போயுள்ளது. நடராஜர், சிவகாமி அம்மன் ஐம்பொன் சிலைகள் இருந்த சன்னிதியை, திறக்க முடியவில்லை. பாதுகாப்பு கருதி ஐம்பொன் சிலைகளை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வைக்க பரிசீலித்து வருகிறோம், என்றார். வாலீஸ்வரர் அறக்கட்டளை தலைவர் தேவராஜ் கூறுகையில், கோவில் பாதுகாப்புக்கு, செக்யூரிட்டியை நியமிக்க வேண்டும். போலீசார் இரவு ரோந்தின் போது, கோவில் அருகேயும் சென்றால், பாதுகாப்பாக இருக்கும். நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகளை, இங்கேயே, வைத்திருக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar