Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடிநாயக்கன்பட்டி காளியம்மன் ... முருகன் கோயில்களில் வைகாசி விசாகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எளிமையான வாழ்வுக்கு உதாரணம் மகா பெரியவர்: விஜயேந்திரர் அருளுரை
எழுத்தின் அளவு:
எளிமையான வாழ்வுக்கு உதாரணம் மகா பெரியவர்: விஜயேந்திரர் அருளுரை

பதிவு செய்த நாள்

27 மே
2021
06:05

 மதுரை :எளிமை வாழ்வுக்கு உதாரணமாகவும், மக்களை நல்வழிப்படுத்தும் கருத்துகளை பரப்பியதிலும், முன்னுதாரணமாக வாழ்ந்தவர் காஞ்சி மகா பெரியவர், என, அவரது ஜெயந்தி விழாவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார். காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி நாளான நேற்று, காஞ்சி மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நல்ல விஷயங்களை நாமும் அறிந்து, பிறருக்கும் அளிக்கும் உயர்ந்த வாழ்க்கைக்கு பயிற்சியும், முயற்சியும் தேவை.

அவ்வாறு பிறருக்கு போதிக்கும் விதமாக, 100 ஆண்டுகள் கடந்து வாழ்ந்தவர் மகா பெரியவர். தவ வாழ்க்கைக்கும், எளிமைக்கும் முன்னுதாரணம். பாரம்பரியம், பழக்க வழக்கங்கள், அறநெறி சார்ந்த வாழ்வு, உணவு, உடை, உலக சிந்தனைகளை துவேஷமற்ற முறையிலேயே உபன்யாசங்கள் மூலம் பரப்புவது, செயல்பாடுகள் மூலமாக நல்லதை போதித்தது என, காஞ்சி மகா பெரியவரின் காலம் உன்னதமானது.

பல்வேறு மொழிகள், நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள் இருக்கும் இந்த மண்ணில் அடிப்படை
கலாசாரத்தால், அனைவரையும் இணைத்து வளர்த்து செல்லும் பணியை பல்வேறு சிரமங்களுக்கு இடையே சாதித்தவர் அவர். அருள் பார்வையாலும், ஆறுதலான பேச்சாலும் அனைவரையும் தன்பால் ஈர்த்தவர். உலகம் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதை தன் வாழ்க்கையால் செய்து காட்டிய நடமாடும் தெய்வத்தை, குருபக்தியோடு வணங்கி இன்றைய பிரச்னைகளை தீர்க்க அருளுமாறு அனைவரும் வேண்டிக் கொள்ள வேண்டும். குருவின் ஆசிகளால் வீழ்ச்சியில் இருந்து விடுபட்டு, காற்றால் வந்த தொல்லையை காற்றிலேயே கரையச் செய்ய வேண்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar