பெரியகுளம் : பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி 4 வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி அருள்பாலித்தார். இதே போல் கோபாலகிருஷ்ணன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.