Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குறை தீர்ப்பான் குருவாயூரப்பன் தெய்வங்களின் இசைக்கருவிகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விருப்பத்தை நிறைவேற்றும் விமானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:06


எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமான அஷ்டாங்க விமானத்தின் கீழே மதுரையில் கூடலழகர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு இருக்கும் கருவறை விமானத்தை 12 முறை சுற்றினால் விருப்பம் நிறைவேறும்.  
பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரர், திருமாலை மனித வடிவில்  தரிசிக்க எண்ணி பூலோகத்தில் தவமிருந்தார். அவருக்கு அருள்புரிய திருமாலும் தேவியருடன் காட்சியளித்தார். தேவசிற்பி விஸ்வகர்மா மூலம் அத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்து கோயில் கட்டினார் சனத்குமாரர். இவர் மதுரையில் ‘கூடலழகர்’ என்னும் திருநாமத்துடன் இருக்கிறார்.
எட்டெழுத்து மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ வடிவத்தில் இருப்பது அஷ்டாங்க விமானம். இக்கோயிலில் 125 அடி உயரத்தில் இந்த விமானம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நிலைகளுடன் எட்டு பகுதிகளைக் கொண்ட இதன் நிழல் கீழே விழுவதில்லை. விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்தில் தேவியருடன் உள்ளார். முதல் தளத்தில்  சூரியநாராயணர் நின்ற நிலையிலும், இரண்டாம் தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளி கொண்ட நிலையிலும் இருக்கின்றனர். பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர் சிலைகளை விமானத்தில் தரிசிக்கலாம். மதுரவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் உள்ளனர்.
திருமாலே பரம்பொருள் என்பதை நிரூபித்தவர் பெரியாழ்வார். இவர் பாடிய ‘திருப்பல்லாண்டு’  பாடலே அனைத்து பெருமாள் கோயில்களிலும் தினமும் அதிகாலையில் நடை திறக்கும்  போது பாடப்படுகிறது. இத்தலத்தை தரிசித்தாலும், மனதால் நினைத்தாலும், ‘வாழ்க பல்லாண்டு’ என்று கூடலழகர் வரம் அளிப்பது திண்ணம்.
சத்திய விரதன் என்னும் மன்னன் கூடலழகர் மீது பக்தி கொண்டிருந்தான். வைகையின் துணைநதியான கிருதுமால் ஆற்றில் மன்னன்  நீராடிய போது மீன் வடிவில் காட்சியளித்த பெருமாள் உபதேசம் செய்தருளினார். அதற்கு நன்றிக்கடனாக பாண்டியநாட்டின் சின்னமாக மீனை ஏற்றுக் கொண்டான். இதன் அடிப்படையிலேயே பாண்டிய அரசின் சின்னமாக மீன் விளங்குகிறது.

தொடர்புக்கு: 0452 – 233 8542

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar