Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரமாத்தியம்மன் கோவிலில் ... காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி கோவிலுக்கு எப்போது கும்பாபிஷேகம்?
எழுத்தின் அளவு:
அவிநாசி கோவிலுக்கு எப்போது கும்பாபிஷேகம்?

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2021
02:07

 அவிநாசி : பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், கும்பாபிஷேகம் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்; கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் துவங்கும் என்கிறது அறநிலையத்துறை. கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது, அவிநாசியில் உள்ள பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற இத்தலம், தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் கொண்டது.13 ஆண்டு ஆனதுகடந்த 1980ல், சுவாமிக்கு ஏழு நிலையிலும், அம்மனுக்கு ஐந்து நிலையிலும் ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. பின், 1991 மற்றும் 2008 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது.ஹிந்து ஆகம விதிப்படி, ஒரு கோவிலுக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அவ்வகையில், அவிநாசி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 13 ஆண்டுகள் ஆகி விட்டது.

சிதிலமடைகிறது: பக்தர்கள் கூறுகையில், திருப்பணிகள் துவங்காததால், கோவிலில் பல இடங்களில், கட்டுமான பணிகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, அபிஷேக நீர் வெளியேறாமல் அடிக்கடி தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. சித்திரை தேர்த்திருவிழாவில் உற்சவமூர்த்திகள் அமர்ந்து வலம் வரும், வாகனங்கள் உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து விட்டது. ராஜகோபுரத்தின் உச்சியில், தேனீக்கள் ராட்சத தேன் கூடு கட்டியுள்ளது. தேன் கூடு கலைந்தால், பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும். இதுபோன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளன. ஆனால், அவற்றை நிவர்த்தி செய்ய செயல் அலுவலர் முன் வருவதில்லை. எனவே, கோவிலில் திருப்பணிகளை உடனே துவக்கி, கும்பாபிஷேகம் செய்ய, ஹிந்து அறநிலையத்துறை முன்வர வேண்டும் என்றனர்.

விரைவில் பணிகள்: திருப்பூர் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜனிடம் கேட்டதற்கு, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து, பூர்வாங்க பணிகள் துவங்கி விட்டன. திருப்பணிகள் குறித்து வல்லுனர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, விரைவில் பணிகள் துவக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar