Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்து முனீஸ்வரர் கோவில் ... காரமடை அரங்கநாதர் கோவில் நந்தவனத்தில் நட்சத்திர செடி மர நாற்றுகள் நடுதல் காரமடை அரங்கநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரடியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரடியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2021
11:07

 விருத்தாசலம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரடியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் மற்றும் கடைகளை, அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். கடலுார் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள தேரடியில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கான தனி தேர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனைச் சுற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களாகவும், தகர ஷீட் அமைத்தும் 29 கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்றுமாறு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்புவதும், கடை உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்வதும் நீட்டித்தது. தேரடியில் உள்ள 29 கடைகளில், 9 கடைகளின் உரிமையாளர்கள் மேல்முறையீட்டிற்கு சென்றதால், மீதமுள்ள 20 கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.கடலுார் உதவி ஆணையர் பரணிதரன் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள், தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்டோர் காலை 10:00 மணியளவில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., மோகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, சன்னதி வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலரை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். பின், ஜேசிபி இயந்திரம் மூலமாக கட்டடங்கள் மற்றும் தகர ஷீட்டுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.உதவி ஆணையர் பரணிதரன் கூறுகையில், விருத்தகிரீஸ்வரர் கோவில் முன் மண்டபத்தில் உள்ள 14 கடைக்காரர்களும், கோர்ட்டில் தடை பெற்றுள்ளனர். தேரடியில் 9 கடை உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்குகள் முடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என்றார்.தேரடியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, அப்பகுதியில் சில்வர் கம்பிகளால் அழகுபடுத்த வேண்டும் என தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டது. தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால், அழகுபடுத்தும் பணியை துவங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் விரைவில் நடக்கவுள்ள நிலையில் தேரடியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 25ல் ... மேலும்
 
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
அவிநாசி; டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச வேலை தடுப்பு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar