Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ... உத்தரகோசமங்கை வாராஹி அம்மனுக்கு வளைகாப்பு உத்தரகோசமங்கை வாராஹி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓரிக்கை காஞ்சி மடத்தில் தினமும் ருத்ர பாராயணம்
எழுத்தின் அளவு:
ஓரிக்கை காஞ்சி மடத்தில் தினமும் ருத்ர பாராயணம்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2021
10:07

சென்னை: காஞ்சி மகா பெரியவர் மணி மண்டபம் உள்ள ஓரிக்கையில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதத்தின் போது தினமும் ருத்ர பாராயணம் நடக்கிறது.

பாரத தேசம் முழுதும் தர்மத்தை நிலைநாட்டி காப்பாற்றுவதற்காக ஸ்ரீ சங்கராச்சாரியார் 2550 ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தில் ஸ்ரீமடத்தை நிறுவினார். இதன் சங்கராச்சாரியார்கள் ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடிப்பர்.மடத்தின் 70வது பீடாதிபதியான ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த ஆண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை கிராமத்தில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் மகாபெரியவர் மண்டபத்தில் ஜூலை 24ல் வியாச பூஜையுடன் துவங்கினார்.

இதுகுறித்து காஞ்சி சங்கர மடத்தின் ஆன்மிக அறிஞர்கள் கூறியதாவது:இந்த ஆண்டு சாதுர்மாஸ்ய விரதம் ஓரிக்கையில் 24ம் தேதி துவங்கி செப். 20ல் நிறைவடைகிறது. இந்த ஆண்டு மகா பெரியவர் மணி மண்டபத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கிறார்.தினமும் காலை சுவாமி தரிசனம் நடக்கும். பஞ்சாங்க சதஸ் என்ற ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு கொரோனா காரணத்தை முன்னிட்டு இவை ஆன்-லைன் வாயிலாக நடத்தப்படுகிறது. பின் அக்னி ஹோத்ர சதஸ், சதுர்வேத பாராயணம், வேத பாஷ்ய சதஸ், அத்வைத வேதாந்த சதஸ், உபன்யாசங்கள், சங்கீத வாத்ய நாமசங்கீர்த்தனங்கள் நடக்கின்றன.ரிக்வேத கன பாராயணம் 40 நாட்கள் தொடர்ந்து காலை மாலை இரவு என மூன்று வேளைகளிலும் நடக்கிறது. ரிக்வேதத்தில் சங்கீத பாராயணம், சாமவேத பாராயணம் நடத்தப்படுகிறது.

சந்திரமவுலீஸ்வரருக்கு தினந்தோறும் அபிஷேகம் ருத்ர பாராயணம் நடக்கும். பின் கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், துர்கா ஹோமம் போன்றவை நடத்தப்படுகின்றன. சந்திரமவுலீஸ்வரர் பூஜை தினமும் மூன்று முறை நடக்கும். இந்த பூஜைகளில் பங்கேற்கும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். இந்த சாதுர்மாஸ்ய பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று ஆச்சாரியரின் அருளைப் பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar