Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி ... கோவில் வேப்ப மரத்தில் இருந்து தண்ணீர்: பல்லடத்தில் பரபரப்பு கோவில் வேப்ப மரத்தில் இருந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
66 அடி உயர சாமுண்டீஸ்வரி உருவச்சிலை ஆக.,8ல் திறப்பு
எழுத்தின் அளவு:
66 அடி உயர சாமுண்டீஸ்வரி உருவச்சிலை ஆக.,8ல் திறப்பு

பதிவு செய்த நாள்

05 ஆக
2021
10:08

மாண்டியா: ராம்நகர் - சென்னப்பட்டணா எல்லை கிராமமான கவுடகரேவில், 66 அடி உயரமான சாமுண்டீஸ்வரி உருவச்சிலை, வரும், 8ம் தேதி திறக்கப்படுகிறது. ராம்நகரின் சென்னப்பட்டணா எல்லைப்புறத்தில், சாமுண்டீஸ்வரி காவல் தெய்வமாக விளங்குகிறார். இப்பகுதி புண்ணியதலமாக விளங்குகிறது. கோவில் நிர்வாகத்தினர், புதிதாக 66 அடி உயரமான பஞ்சலோக சாமுண்டீஸ்வரி உருவச்சிலை அமைத்துள்ளனர். ஆக., 8ல் இந்த உருவச்சிலை திறந்து வைக்கப்படுகிறது.

இது குறித்து கோவில் தர்மகர்த்தா மல்லேஷ் கூறியதாவது: தெற்காசியாவிலேயே மிக உயரமான, தங்கமுலாம் பூசப்பட்ட பஞ்சலோக சாமுண்டீஸ்வரி சிலை இதுவாகும். ஆக., 8ல் திறந்து வைக்கப்படுகிறது. அன்று அதிகாலை 2:00 மணியிலிருந்து, ருத்ராபிஷேகம், சக்ராபிஷேகம், காலை 4:28 மணிக்கு மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் நடக்கும்.காலை 7:28 மணிக்கு, இரண்டாவது மஹாமங்களாரத்தி, சிறப்பு பூஜைகள் நடக்கும். நந்திக்கு பாலாபிஷகம் உட்பட, பல்வேறு பூஜைகள், கைங்கர்யங்கள் நடக்கும். இந்த உருவச்சிலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மிகவும் சாந்தமான முகத்துடன் காட்சியளிக்கும் சாமுண்டீஸ்வரி உருவச்சிலை அமைக்க, பக்தர்கள் காணிக்கையாக அளித்திருந்த, 16 டன் உலோகம் பயன்படுத்தப்பட்டது. கொரோனா பரவுவதால், அரசின் உத்தரவுபடி முன்னெச்சரிக்கையுடன், எளிமையாக நிகழ்ச்சி நடத்தப்படும். பல இடங்களிலிருந்து, பக்தர்கள் வருகை தருவர். பக்தர்களும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar