பதிவு செய்த நாள்
07
ஆக
2021
04:08
புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், ஆடி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.
புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை, கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிமாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை நந்தி பகவானுக்கு, பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப் பட்டது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, சமூக இடைவெளி, முக கவசம் அணிந்து பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.பிரதோஷ வழிபாட் டிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மணிகண்டன் கிருஷ்ணமூர்த்தி, தேவ சேனாதிபதி குருக்கள், சீனு குருக்கள் செய்திருந்தனர்.