Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இணையவழியில் கலை, இலக்கிய, சமய ஆய்வு ... சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: பக்தர்களுக்கு தடை சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகர்கோயில் சித்ரா இந்து மத நூல் நூலகம் மீண்டும் திறப்பு
எழுத்தின் அளவு:
நாகர்கோயில் சித்ரா இந்து மத நூல் நூலகம் மீண்டும் திறப்பு

பதிவு செய்த நாள்

03 செப்
2021
07:09

கன்னியாகுமரி:  நாகர்கோயில், சுசீந்திரம் சித்ரா இந்து மத நூல் நிலையம் 5 ஆண்டுகளுக்கு  பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள்  உத்தரவின்படி திறக்கப்பட்டது.
 
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கன்னியாகுமரி மாவட்ட கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு கடந்த மாதம் 13ம் தேதி ஆய்வு மேற்கொண்டார். நாகர்கோயில் அண்ணா ஸ்டேடியம் அருகில் மஹாராஜாவால் இந்து சமயம் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகம் சித்ரா நூலகம் என அழைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி பூட்டி கிடந்ததாகவும், இந்து சமய நூல்கள் அடங்கிய சித்ரா நூலகத்தை மீண்டும் திறந்து பராமரிக்க வேண்டும். வாசகர்களை அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் நூலகத்தை பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் நூலகம் பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தினமும் காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நூலகம் செயல்படும். வாரத்தின் திங்கட்கிழமை விடுமுறை. ஆன்மிகம் சம்பந்தமான நூல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆன்மிகம் தொடர்பான பல நூல்கள் புதிதாக வைக்க ஏற்பாடு செய்யப்படும். சித்ரா நூலகம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து இருப்பதை இந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு செய்தார். துலா ... மேலும்
 
temple news
சிந்துவெளி மக்கள் குதிரையை அறியாதவர்கள், சிந்துவெளியில் மகாபாரதத்துக்கான சான்றுகள் இல்லை என ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar