Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உன்னை அறிந்தால்! நீ உன்னை அறிந்தால்! சிப்லன் பரசுராமர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அறுபடை வீடும் ஓரிடத்திலே...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2021
01:09


திருப்பூர் கிருஷ்ணன்

 ‘திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமி மலை, திருத்தணி, சோலைமலை ஆகிய ஆறும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகள். இத்தலங்களை தரிசிக்கச் செல்பவர்கள் ஒவ்வொரு இடமாகப் பயணம் செய்து சுவாமியை தரிசிக்க  வேண்டியிருக்கிறது. இந்த ஆறும்  ஓரிடத்தில் அமையுமானால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? பக்தர்கள் ஒரே இடத்தில் வழிபட்டு மகிழ்ச்சி அடைவார்கள் அல்லவா’  என்று முருக பக்தர்களின் மீதுள்ள ஈடுபட்டால்....இப்படி சிந்தித்தது காஞ்சி மஹாபெரியவரின் மனம்.
  முருகனின் அடியவரான பாம்பன் சுவாமிகளின் சமாதி சென்னையில் உள்ளது. இவர் தாம் ஸித்தி அடையும் முன்பாக, ‘சென்னை கடற்கரை ஓரமாக முருகப் பெருமானுக்கு பெரிய கோயில் ஒன்று கட்டாயம் அமையும்’ என குறிப்பிட்டிருந்தார்.  இந்த தகவலை காஞ்சி மஹாபெரியவரும் அறிந்திருந்தார்.
  இந்த சூழலில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் ஒருமுறை பெரியவரைத் தரிசிக்க வந்திருந்தார். அவரிடம் ‘‘அறுபடை வீடுகளுக்கும் ஒரே இடத்தில் கோயில் அமைய விரும்புகிறேன். அதற்கு பொருத்தமான இடத்தை சென்னை கடற்கரையில் அரசின் தரப்பில் அளித்தால் நன்றாக இருக்கும்’’ எனத் தெரிவித்தார். நெகிழ்ச்சியடைந்த எம்.ஜி.ஆர் ஆவன செய்வதாக உறுதியளித்தார். ஓரிரு மாதங்களில் சென்னை பெசன்ட் நகரில் இடம் வழங்கவும் உத்தரவிட்டார்.  பக்தர்களின் பங்களிப்புடன் இங்கு திருப்பணிகள் முடிக்கப்பட்டு கோயில் நிர்மாணிக்கப்பட்டது. இப்போது ஒரே இடத்தில் அறுபடை வீட்டு முருகப்பெருமானை நாம் தரிசிக்கலாம். இக்கோயிலில் திருமணம் நடத்துவதை பக்தர்கள் பாக்கியமாக கருதுகின்றனர்.
பெரியவரை தரிசித்த அனுபவம் பற்றி எம்..ஜி.ஆர், ‘‘ஞானத்தில் பழுத்தவர் காஞ்சி மஹாபெரியவர். பற்றற்ற மனதுடன் மற்றவர்களுக்காக தன்னை அர்ப்பணித்த அருளாளர். அவரை தரிசிப்பதில் மனநிறைவு அடைகிறேன்’’  எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar